சென்னை. ஏப்.16., இன்று காவிரி போராட்டத்தில் சிறை சென்ற மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது உள்ளிட்ட 7 மஜக நிர்வாகிகளை இன்று புழல் சிறைக்கு சென்று, பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA சந்தித்து பேசினார். அவருடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், மாநில துணைச் செயலாளர் ஷமிம் ஆகியோர் உடன் சென்றனர். சட்ட நடவடிக்கைகள் மூலம் விரைவில் விடுதலைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதை கூறினார். அதிகபட்சமாக மூன்று நாட்களுக்குள் விடுதலை சாத்தியமாகும் என்பதையும் கூறினார். சிறையில், அதிகாரிகள் நல்ல ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், சிறையில் நாங்கள் உற்சாகமாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர். அதனை அடுத்து மாநிலச் செயலாளர்கள் தைமிய்யா, நாச்சிகுளம் தாஜூதீன், IT WING மாநில செயலாளர் எ.எம்.ஹாரிஸ் உள்ளிட்டோரும் சிறையில் சந்தித்து பேசினர். அதன் பிறகு, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள், காவிரி போராட்டத்திற்காக சிறை சென்ற மஜக பொருளாளர் S.S. ஹாரூன் ரசீது உட்பட 8 மஜக நிர்வாகிகள், மேலும் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
மஜக தேனி மாவட்டம் சார்பில், மாநில பொருளாளர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!
தேனி.ஏப்.26., காவிரி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாநில பொருளாளர் S.S.ஹாரூண் ரசீத் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள்மீது தடியடி நடத்தி பொய் வழக்கின் கீழ் கைது செய்த காவல்துறையை வண்மையாக கண்டித்தும், பொய் வழக்கை திரும்பபெற்று மஜகவினர் உட்பட அணைவரையும் விடுதலைசெய்ய கோரியும், தேனி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக உத்தமபாளையம் பைபாஸில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ரியாஸ் தலைமையேற்க்க, மாவட்ட பொருளாளர் சேக் பரீத் மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள் கம்பம் கலில், பாளையம் தமீமுன் அன்சாரி, மாநில செயற்குழு உறுப்பினர் கரீம் ஆகியோர் முன்னிலைவகுத்தனர். பெரியகுளம் நகர செயலாளர் தஸ்திக் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செயலாளர் E.அபுதாஹிர் அவர்களும், முஸ்லிம் யூத் லீக் தேனி மாவட்ட தலைவர் முகம்மது இப்ராஹீம் உஸ்மானி அவர்களும், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் மன்னை.செல்லச்சாமி அவர்களும் கண்டன உரையாற்றினார்கள். இறுதியாக கம்பம் நகர செயலாளர் அஜ்மீர் நன்றியுரையாற்றினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தேனி_மாவட்டம் 15.04.18
காவேரிக்காக போராடியவர்களின் மீதான வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம்! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA எச்சரிக்கை..!
சென்னை.ஏப்.14., திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம் அம்பத்தூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் "மத்திய அரசின் வெறுப்பு அரசியலை கண்டித்து" பொதுக்கூட்டம் நேற்று (13.04.2018) நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மஜக அவைத்தலைவர் நாசர் உமரீ, தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் A.S.அலாவுதீன், மாநிலச் செயலாளர்கள் சீனி முகம்மது, தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனீஸ், சமீம் அஹமது, தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ் மற்றும் மாவட்ட செயலாளர் ஆனையூர் அக்பர் உசேன், மாவட்ட பொருளாளர் இஸ்மாயில், தலைமை செயற்குழு உறுப்பினர் பூவை அப்துல் காதர், மாவட்ட துணைச் செயலாளர் மதுரவாயல் சுலைமான் , மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் கரிமுல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியபோது. காவேரி உரிமைக்காக தன்னெழுச்சியாக தமிழர்கள் போராடி வருகிறார்கள். அவர்களின் மீது காவல்துறை வழக்குகளை பதிவு செய்திருக்கிறது. கைது செய்யப்பட்டிருந்த என்னையும்,மற்ற தலைவர்களையும் பார்ப்பதற்காக வந்த எங்கள் கட்சியின் பொருளாளர் #ஹாரூன்_ரஷீது உள்ளிட்ட 8 பேரை பொய் வழக்கில் சிக்க வைத்து சிறையில் தள்ளியுள்ளனர். இதுபோல பல கட்சியினரும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். விடுதலை
வாணியம்பாடியில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்!
வாணியம்பாடியில் ஜாமியத்துல் உலமா மற்றும் மஜ்லிஸூல் உலமா அமைப்புகள் இணைந்து மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் முத்தலாக் மசோதாவை திரும்ப பெற வலுயுறுத்தியும், பாஜகவின் அரசியல் சாசன விரோதம் போக்கையும் கண்டித்து பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் திருச்சி வேலுச்சாமி (காங்கிரஸ்) ப.ழ. கருப்பையா (திமுக) M.தமிமுன் அன்சாரி MLA (மஜக), வழக்கறிஞர் அந்திரிதாஸ் ( மதிமுக), அபுபக்கர் MLA (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்), மவ்லவி ரஹமத்துல்லா (அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்), அப்துல் சமது(மனிதநேய மக்கள் கட்சி), சையது அஹ்மத் ஹீசைனி (வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா), முகம்மது ஆசாத்(SDPI), இனாமுல் ஹக் சாயபு (ஜாமியத் உலமா), சையத் அப்துல் ரஹ்மான் (நகர தலைமை காஜி) உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் 1500 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING #வேலூர்_மேற்கு_மாவட்டம். 12.01.18
முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு…!!
கிருஷ்ணகிரி. ஜன.11., மத்திய மதவாத அரசை கண்டித்து ஓசூரில் ஜமாத்துல் உலாமா சபை சார்பாக அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களை கூட்டி முத்தலாக் தடை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மஜக பொருளாளர் அவர்களின் கண்டன உரையில் குறிப்பாக பாசிசத்திற்கு எதிராக பிற்படுத்தபட்டோரும், ஒடுக்கபட்டோரும், நாத்திகர்களும், சேர்ந்து வேரறுப்போம் என்றும், முத்தலாக் தடை சட்டம் இந்திய இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றார். இஸ்லாம் வழங்ககூடிய ஷரியத் சட்டம் அழகிய வாழ்வியல் நெறிமுறையை சூட்டிக்காட்டியிக்கிறது. இது போன்ற அழகிய சட்டங்கள் எந்தவொரு மார்க்கத்திலும் கிடையாது என்றும் இந்த சட்டத்தை உணர்ந்த பிற சமூக மக்களும் ஷரியத் சட்டத்திற்காக குரல் கொடுத்து வருகிறார்கள் என்பதை தெளிவாக பேச்சில் சுட்டிக்காட்டினார். இதில் மஜகவின் அவைத் தலைவர் சம்சுதீன் நாசர் உமரி, மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் அமீன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ஆரிப், மாவட்ட பொருளாளர் சையத் நாவஸ், தலைமை