திரு.வி.கா நகரில் பொதுமக்களுக்கு குளிர்பானம் மோர் வழங்கிய மஜகவினர் மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்பு…..

ஜூன்.02.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்,
வடசென்னை மேற்கு மாவட்ட மஜக சார்பில் திரு.வி.க நகர் பகுதியில் பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் – மோர் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் ஹனீஃப் அவர்களது தலைமையில் இன்று நடைப்பெற்றது.

இதில் மாநில செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, நாகை. முபாரக் ஆகியோர் கலந்துக்கொண்டு பொதுமக்ளுக்கு குளிர்பானங்களை வழங்கி நிகழ்வை தொடங்கி வைத்தனர்.

சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தவிக்கும் மக்களுக்கு தாகம் தீர்க்க குளிர்பானங்கள் வழங்கிய மஜக-வினரை பொதுமக்கள் நன்றியுடன் பாராட்டினர்.

இதில் மாநில துணைச்செயலாளர் அரிமா.அஸாருதீன், மாணவர் இந்தியா தலைவர் புரட்சி முழக்கம் பஷீர் அஹமது, மாவட்ட பொருளாளர் அப்துல் ரசாக், மாவட்ட துணைச்செயலாளர் அல்லா பகஷ் மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வடசென்னை_மேற்கு_மாவட்டம்
02.06.2024