Latest Posts
தஞ்சையில் நினைவேந்தல்… உபையதுல்லாவின் நேர்மையும் எளிமையும்….! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!அறந்தாங்கியில் பட்டமளிப்பு விழா..! எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும்தலைமையக அறிவிப்பு..நியமன அறிவிப்பு…
கடந்த பிப்ரவரி 19 அன்று இறந்த, முன்னாள் அமைச்சர் உபையதுல்லா அவர்களளுக்கு சமூக ஆர்வலர்களும், இலக்கியவாதிகளும், வணிகர்களும் இணைந்து தஞ்சாவூரில் நினைவேந்தல் நிகழ்வை நடத்தினர். இதில் குன்றக்குடி அடிகளாரும், மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரியும், பாதிரியார் அமுதன் அடிகளாரும் பங்கேற்றனர். இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசும் போது அவரது எளிமையையும், அரசியல் நேர்மையையும் பாராட்டினார். மேலும் அவர் பேசியதாவது…. அவர் 14 வயதிலேயே ‘திராவிடம் வெல்க’ என கரும்பலகையில் எழுதி கொள்கையை பேசினார். இலக்கியவாதிகளையும், கலைஞர்களையும் ஊக்குவித்தார். வெளியில் சொல்லாமல் அவர் தர்மங்களையும், உதவிகளையும் சாதி, மதம் பாராமல் செய்தார். அவர் அமைச்சராக இருந்தபோது, தனது மகன் இறந்த அன்று அந்த
தஞ்சை மாவட்டம் பாபநாசம் திருமண்டங்குடியில் உள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை உள்ளது. இதற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இப்பகுதி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 109-வது நாளான இன்று அவர்களுக்கு ஆதரவளித்து மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன அன்சாரி அவர்கள் அவர்களது களத்தில் பங்கேற்றார். அவருடன் மாநில துணை செயலாளர் அகமது கபீர், மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் பண்டாரவாடை மஹ்ரூப் ஆகியோரும் வருகை தந்தனர். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் அவர்கள், விவசாயிகளின் பெயரில் அந்த ஆலை வாங்கிய 300 கோடி ரூபாய் கடனை வாக்களித்தப்படி அந்த ஆலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு கிடைக்க
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ஃபிஜ்ருல் ஹுதா பெண்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடந்தேறியது. விழாவில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று ‘பெண்களுக்கு இஸ்லாம் வழங்கி உள்ள உரிமைகள்’ குறித்து பேசினார். மார்க்கம், அது சார்ந்த வாழ்வியல், குடும்ப நிர்வாகம், பொது அறிவு, சமூக சேவை என அனைத்திலும் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என வாழ்த்தி பேசினார். பன்முக சமூக அமைப்பில் பிள்ளைகள் வளரும் நிலையில், புரிதலும் – இணக்கமும் சூழ அவர்களை வளர்ப்பதில் அக்கறை காட்ட வேண்டும் என்றார். இவ்விழாவில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், ஜாக் அமைப்பைச்
மனிதநேய ஜனநாயக கட்சியின் சென்னை மண்டல வளர்ச்சியை கருத்தில் கொண்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட திருவொற்றியூர் தொகுதி வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் இணைக்கப்படுகிறது. திருவொற்றியூர், இராயபுரம், ஆர்.கே.நகர் ஆகிய தொகுதிகள் வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாக அமைப்பாக செயல்படும். மேலும் மாதாவரம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆகிய தொகுதிகள் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகமாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 15.03.2023
மனிதநேய ஜனநாயக கட்சியின், தலைமை செயற்குழு உறுப்பினராக, அ.ரபீக் காளம்புழ, மைசூர் ரோடு கூடலூர், நீலகிரி அலைபேசி:7540078800 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 15:03:2023