Latest Posts
தஞ்சை தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!திடீர் மழையால் விளை நிலங்கள் பாதிப்பு… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேரில் ஆறுதல்!விருதுநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம்!அறந்தாங்கி முபாரக் அலிக்கு ஆறுதல்… மஜக பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் வருகை!மதுரையில் மஜகவினர் அவசரகால இரத்ததான உதவி..!
மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட “மக்களுடன் மஜக” செயல்திட்ட ஆலோசனை கூட்டம் அதிராம்பட்டினத்தில் மாவட்ட செயலாளர் அதிரை ஷேக் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை பொதுச் செயலாளர் ராவுத்தர்ஷா மற்றும் மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளரும், துணை பொதுச்செயலாளருமான நாச்சிகுளம் தாஜூதீன் ஆகியோர் முன்னிலை வகித்து, நிர்வாக பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர். இதில் பங்கேற்ற பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் புதிய கிளைகளை கட்டமைப்பது குறித்தும், வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார். பகுதிவாரியாக மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என்றும், சமூக நல்லிணக்கத்தை வலிமை படுத்தும் பன்முக அரசியலை வளர்த்தெடுக்க வேண்டும்
பிப்ரவரி மாதத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான அளவில் பெய்த மழையில் டெல்டா மாவட்டங்களில் சுமார் மூன்று லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர் தொகுதிக்குட்பட்ட மகிழி, திருப்பூண்டி மற்றும் வேதாரண்யம் தொகுதிக்குட்பட்ட தலைஞாயிறு, விழுந்தமாவடி, புதுப்பள்ளி பகுதிகளில் மழையில் மூழ்கிய விளை நிலங்களை மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பார்வையிட்டார். அவருடன் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் மற்றும் மாநில செயலாளர் நாகை முபாரக் ஆகியோரும் உடன் வருகை தந்தனர். அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழையில் மூழ்கி அழுகிய நிலையில் இருந்ததையும், முளை விட்டிருப்பதையும் விவசாயிகள் வேதனையுடன் காட்டினார்கள். பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் மகபுஜான் அவர்களின் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விருதுநகர் மாவட்டம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தல், நடப்பு மாதத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கண் மருத்துவ முகாம் நடத்தவது என்றும், ராஜபாளையத்தில் கம்மாய்கள் தூர்வாரப்பட வேண்டும் மேலும் கம்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், “மக்களுடன் மஜக” செயல் திட்டத்தின் கிழ் ராஜபாளையத்தில் அரசு திட்டங்கள் அனைத்தும் தீவிரப்படுத்த கோரி அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், அமைச்சர் மற்றும்
மஜகவின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் அறந்தாங்கி முபாரக் அலி அவர்களின் தந்தையும், தாயும் அடுத்தடுத்து இறந்தனர். அவருக்கு ஆறுதல் கூற, பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று அவரது வீட்டிற்கு வருகை தந்தார். அவருடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், துணைப் பொதுச் செயலாளர்கள் மதுக்கூர் ராவுத்தர்ஷா மற்றும் நாச்சிக்குளம் தாஜ்தீன் ஆகியோர் உடன் வருகை தந்தனர். பிறகு அங்கு வருகை தந்த நிர்வாகிகளுடன் ‘மக்களுடன் மஜக’ பணிகள் குறித்து கலந்துரையாடினர். இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் பேராவூரணி சலாம், சிவகங்கை மாவட்ட செயலாளர் ஹாஜா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அறந்தாங்கி அஜ்மீர் அலி, திருப்பத்தூர் மஜிது மற்றும் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட
மதுரை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியினர் இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இராமநாதபுரத்தை சேர்ந்தவருக்கு 7 யூனிட் A+ அவசரகால இரத்ததானம் வழங்கினார்.