வடசென்னை கிழக்கு மாவட்ட நியமன அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளாக,

மாவட்ட துணைச் செயலாளராக,

M.S.காசிம் ஷெரீப்
எண்.20,3வது தெரு,
வடக்கு பாரதியார் நகர்,
எண்ணூர் விரைவுச்சாலை,
சென்னை-600019
அலைபேசி; 9941769937

இளைஞர் அணி மாவட்ட செயலாளராக,

B.முஹம்மது அலி
1027, ராஜாகடை மெயின் தெரு,
டி.எச்.ரோடு, சென்னை-600019
அலைபேசி; 9080174622

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
06.09.2023

திருப்பூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் பங்கேற்பு…

திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் இக்பால் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார்.

அவருடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் கேப்டன் செய்யது முகம்மது பாரூக், மாநில செயலாளரும், மாவட்ட மேலிட பொறுப்பாளருமான கோவை ஜாபர் ஆகியோரும் பங்கேற்றனர்.

இதில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டது.

அதன் பின்னர் பொதுச் செயலாளர் அவர்கள் கட்சியின் வளர்ச்சி, அடுத்தகட்ட நகர்வு, கிளைகள் கட்டமைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

புதிதாக பலர் வெவ்வேறு கட்சிகள், அமைப்புகளிலிருந்து விலகி நமது கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்திருப்பது குறித்தும், செயல்படாமல் ஒதுங்கியிருக்கும் பழைய நிர்வாகிகளுக்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

நிறைவாக எதிர்வரும் செப்டம்பர் 27 அன்று சாதி, மத, வழக்கு பேதமின்றி 20 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய சேலம் மத்திய சிறை முன்பு நடைபெற உள்ள சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்பது குறித்தும், அது சார்ந்த களப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்திலிருந்து 25-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் புறப்படுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு பிறகு முன்னாள் நிர்வாகிகள், செயல் வீரர்கள் என பலரும் பொதுச் செயலாளரை சந்தித்து கட்சி பணிகள் குறித்து தங்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

இன்றைய கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட துணைச்செயலாளர்கள் ஷேக் அப்துல்லா, சாதிக், யாசர், ஈஸ்வரன், ஷேக் ஒலி, அணி நிர்வாகிகள் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முகமது ஆரிப், mjvs அப்பாஸ், சாகுல், மாணவர் இந்தியா அசாருதீன், முகமது ஆசிக், மற்றும் மனிதஉரிமை அணி இம்ரான், it wing காதர் கான், MJTS காஜா உசேன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருப்பூர்_மாநகர்_மாவட்டம்
05.09.2023

நீலகிரி மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் பங்கேற்பு..

இன்று நீலகிரி மேற்கு மாவட்டத்திற்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வருகை தந்தார்.

அப்போது மேலிட பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான ஜாவீத் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இம்மாதம் கூடலூர் பகுதியில் நடைபெற உள்ள கட்சி கொடியேற்று நிகழ்ச்சிகள் மற்றும் ஒரு நாள் அரசியல் பயிலரங்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இப்பகுதியில் தொடர்ந்து நீடிக்கும் பட்டா பிரச்சனைகள் குறித்தும், வனத்துறைக்கும், மக்களுக்கிடையேயுமான நிலவியல்- நிர்வாக சிக்கல் குறித்தும் பேசப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி, மாவட்ட பொருளாளர் மஜீத் அமீனி, மாவட்ட துணை செயலாளர்கள் ஜோசப், முஹம்மத் முஜீப், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக தேவர் சொலை பஞ்சாயத் கவுன்சிலர் கிரிஜா ஜோசப் அவர்கள் பொதுச் செயலாளர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நீலகிரி_மேற்கு_மாவட்டம்
05.09.2023

கோவை மாநகர் மாவட்ட MJTS நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் தேநீர் விருந்து

கோவைக்கு ஒரு நாள் பயணமாக வருகை மேற்கொண்டிருந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு மாநகர மஜக சார்பில் கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் என சுமார் 100 வாகனங்களில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வரவேற்பளிக்கப்பட்டது.

இதில் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் ( MJTS) சார்பில் 40 ஆட்டோக்களில் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

அன்று மாலை MJTS மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், தற்போது MJTS பதிவு முறைப்படி புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த மாதம் மதுரையில் MJTS-ன் மாநில செயற்குழு கூட இருப்பதாகவும், அதில் எல்லோரும் சந்திப்போம் என்றார்.

கோவையில் இன்று உற்சாக வரவேற்பளித்தமைக்கு நன்றி கூறியவர், அதன் நிர்வாகிகளுக்கு மாலையில் தேனீர் விருந்தளித்து சிறப்பித்தார்.

இதில் மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் செய்யது முகம்மது பாருக் , MJTS பொறுப்பாளர் கோவை ஜாபர், MJTS மாநில பொருளாளர் கனி ஆகியோரும் பங்கேற்றனர்.

மேலும் MJTS மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, பொருளாளர் அன்சர் அலி, துணைச்செயலாளர்கள் ஹூசைன், அமான், மற்றும் வானவில் மீட்டர் ஆட்டோ தலைவர் உசேன், துணைத் தலைவர் ஜலால் ரஹ்மான், செயலாளர் ரஹ்மான், பொருளாளர் பீர் முஹம்மது, துணைச் செயலாளர்கள் முஸ்தபா, காஜா, ரகுமான், உறுப்பினர்கள் ரியாஸ், ரஃபி, சம்சுதீன், அப்துல் ரகுமான், சஜ்ர் ரஹ்மான், இக்பால், அன்வர், அக்கிம், கிதிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
04.09.2023

கோவை மாவட்ட செயற்குழு கூட்டம்

இன்று கோவை மாவட்ட மஜக-வின் சார்பில செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் M.H. அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, தலைமை ஒருங்கிணைப்பாளர் கேப்டன் செய்யது முகம்மது ஃபாரூக், மாநில செயலாளர் கோவை ஜாபர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் செப்டம்பர் 27 அன்று ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்யக்கோரி, சேலம் மத்திய சிறைக்கு முன்பு நடைபெற உள்ள போராட்ட களம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் கோவை மாநகர் மாவட்டத்திலிருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமானோரை திரட்டி சென்று சேலம் களத்தில் பங்கேற்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் பணிகளை செம்மைப்படுத்தும் வகையில், மாவட்டத்தின் சார்பில் திட்டமிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மாநிலச் செயலாளர் கோவை ஜாபர் பேசும்போது, கடந்த 6 மாத கால மாவட்ட மஜக பணிகள் குறித்து பாராட்டினார். மேலும் கோவையில் சகல தரப்போடு நட்புறவையே நாம் விரும்புகிறோம் என்றார்.

மாவட்ட செயலாளர் அப்பாஸ் பேசும் போது, இன்றைய நிகழ்ச்சிகளுக்காக அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ஆற்றிய உழைப்பை பாராட்டினார்.

தலைமை ஒருங்கிணைப்பாளர் செய்யது முகம்மது பாரூக் பேசும்போது, சேலம் போராட்ட களத்தை மேற்கு மண்டலத்தில் எழுச்சியோடு நடத்திட கோவை மாவட்ட மக்களின் பங்கேற்பு குறித்து பேசினார்.

பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசும்போது, வன்முறைக்கு பணியவும் மாட்டோம், அதற்கு துணியவும் மாட்டோம் என்ற மஜக நிலைபாட்டை விளக்கினார்.

ஆதரவாளர்களை தூண்டிவிட்டுவிட்டு ஓடி விடுவது, வன்முறைக்கு தூபம் போடுவது போன்ற கலாச்சாரங்களுக்கு நாம் ஒரு காலத்திலும் ஆதரவளித்து விடக்கூடாது என்றும், ஜனநாயக வழியில் மக்கள் பணியாற்றும் அதே பாதையில் பயணிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றார்.

இன்றைய நிகழ்வுகளை ஒருங்கிணைத்த மாவட்ட / பகுதி / கிளை நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தவர், MJTS நிர்வாகிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.

கள ஒருங்கிணைப்பை சிறப்பாக முன்னெடுத்த இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஃபைசல் அவர்களுக்கும் வாழ்த்துக்களை கூறினார்.

நிறைவாக கோவையில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வரும் மாநகர காவல் ஆணையர் திரு. பாலகிருஷ்ணன் மற்றும் அனைத்து காவல்துறை – உளவுத்துறை அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒன்றிய அரசின் சமூக நீதிக்கு எதிரான விஸ்வகர்மா திட்டத்தை துணிச்சலுடன் எதிர்த்து கருத்துரைத்த விளையாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட துணைச்செயலாளர் ஹனீப் அவர்களின் நன்றியுரை மற்றும் கட்சி முழக்கங்களுடன் செயற்குழு கூட்டம் நிறைவுற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ஜாபர் சாதிக், அன்வர், காஜா, இளைஞரணி செயலாளர் முஜீப், வர்த்தகர் அணி செயலாளர் பயாஸ், MJTS மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, MVP மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஹாரூன் ரசீது, சுற்றுச்சூழல் அணி செயலாளர் ஹக்கீம், IT WING செயலாளர் சிராஜ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரோஸ் கான் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
04.09.2023