மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அறிக்கை! தமிழ்நாட்டின் 16-வது சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தமிழக மக்கள் பரிசளித்து இருக்கிறார்கள். 234 இடங்களில் 163 இடங்களை இக்கூட்டணிக்கு வழங்கி தெளிவான வெற்றியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இதன் மூலம் வடக்கத்திய அரசியல் படையெடுப்பை தடுத்து நிறுத்தி, பாஜகவோடு யார் கூட்டணி வைத்தாலும் ஆட்சி அதிகாரத்தின் நிழலைக் கூட நெருங்க முடியாது என்ற செய்தியை தமிழகம் உணர்த்தியிருக்கிறது. மாபெரும் இந்த வெற்றிக்காக கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடுமையான களப்பணிகளின் மூலம் அயராது உழைத்த திமுக தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் உழைப்பு அளவிட முடியாதது. தன் இளமைக் காலம் முதல், தமிழக மக்களுக்காக பல வகையிலும் உழைத்த அவருக்கு, மக்கள் தற்போது முதல்வர் பதவியை அளித்து கௌரவித்து இருக்கிறார்கள். திராவிட இயக்கத்தை தொடர்ந்து வெற்றிப் பாதையில் வழிநடத்தி செல்லும் தலைவராக அவர் உயர்ந்திருக்கிறார். அதுபோல் மேற்கு வங்கத்தில் அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் எதிர்கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஈட்டிய பெரும் வெற்றி வரலாற்று சிறப்புமிக்கதாகும். கேரளாவில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில்
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
படைப்பாளிகளை ஊக்குவிக்கவேண்டும்! கவிதை தேன் நூல் வெளியீட்டுவிழாவில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி MLA பேச்சு!
நவ.19, கவிஞர் காரை ஜின்னா அவர்கள் எழுதிய "கவிதை தேன்" என்ற நூலை நாகூரில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிட, இந்திய தேசிய லீக்கின் அகில இந்திய பொதுச் செயலாளர் MGK நிஜாமுதீன் பெற்றுக் கொண்டார். நூலை வெளியிட்டு பொதுச் செயலாளர் பேசியதாவது:- https://m.facebook.com/story.php?story_fbid=2099654636800967&id=700424783390633 நூல் வெளியீட்டு விழாக்கள் குறைந்து வருவதும், அதில் பார்வையாளர்கள் குறைந்து வருவதும் ஆரோக்கியமான விஷயமல்ல. அது போல், நூல் வாசிப்பாளர்கள் எண்ணிக்கையும் குறைந்து வரும் நிலையில், படைப்பாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. முதிர்ச்சிமிக்க சமூக அமைப்பில் இது குறித்து ஆராய வேண்டும். கவலைப்பட வேண்டும். நூல் வெளியிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் என கருதி பலரும் அஞ்சும் நிலை உருவாகி உள்ளது. மலையாளம், வங்கம், மராட்டிய மொழிகளில் நூல்கள் வெளியாகி, ஒரே வருடத்தில் பல பதிப்புகளை காணுகின்றன. தமிழில் அந்த நிலை குறைந்து வருகிறது. தமிழக முஸ்லிம் சமூகம் தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பணி ஆற்றியுள்ளது. தற்போது இதில் ஒரு சுணக்கம் நிலவுகிறது. நாகூர் என்பது பல கவிஞர்களை, இலக்கியவாதிகளை, எழுத்தாளர்களை, கலை படைப்பாளிகளை தந்த ஊர். நாகூர் அனீபா, கலைமாமணி கவிஞர் சலீம் ஆகியோர்
பாஜக ஆட்சியை அகற்றி மதச்சார்பற்ற சமூக நீதி சக்திகளை ஆட்சியில் அமர்த்துவோம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பிரகடனம்!
சென்னை.பிப்.28., 2019 - நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து விவாதிக்க இன்று கட்சியின் சிறப்பு நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. அதன் நிறைவாக தலைமை நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் இறுதி வடிவம் பெற்றது. இன்று மாலை கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை மண்ணடியில் நடைப்பெற்றது. அதில் அந்த தீர்மானத்தை பெருத்த ஆராவரத்திற்கிடையே கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அறிவித்தார். அந்த தீர்மானம் பின்வருமாறு... இந்திய திருநாட்டை பாசிஸ்டுகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்க வேண்டிய கட்டாயத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை நாடு சந்திக்கிறது. மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தால், ஜனநாயகம், நீதிமன்றம், அரசியல் சட்ட அமைப்பு, சமூகநீதி, மதச்சார்பின்மை, மாநிலங்களின் உரிமைகள், கல்வி அமைப்புகள், ஆகியவை முற்றிலுமாக சீர்குலைக்கப்படும் அபாயம் இருக்கிறது. மேலும், கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழக நலன்களுக்கு எதிராகவே மத்திய பாஜக அரசு செயல்பட்டு வந்திருக்கிறது. அந்த வகையில் பாஜகவின் வளர்ச்சி என்பது தமிழகத்திற்கும், திராவிட - தமிழ் தேசிய அரசியலுக்கும் பேராபத்தை விளைவிக்கும் என்பதையும் சான்றோர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். இவை அனைத்தையும் மஜக உன்னிப்பாக கவனித்து , இத்தேர்தலை நுட்பமாக எதிர்கொள்ள வேண்டும் என
சிறைவாசிகளின் வாழ்வில் வெளிச்சத்தை பாய்ச்சுங்கள்!
"முத்தலாக் மசோதா " நூல் வெளியீட்டு விழாவில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு! சென்னை.அக்..23., சென்னை கலைவாணர் அரங்கில், நேற்று (22.10.2018) மாலை #அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் #அன்வர்_ராஜா_MP அவர்கள் #முத்தலாக் மசோதா தாக்கலின் போது பேசிய உரைகள் அடங்கிய நூலை புதுமடம். ஜாபர் அவர்கள் தொகுத்து, ஷா பதிப்பகம் அதை வெளியிட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழாவில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசியதாவது.... முத்தலாக் மசோதாவை மத்தியில் ஆளும் மோடி அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போது நாடே பதட்டமடைந்தது. மதச்சார்பின்மை கொள்கை கொண்ட கட்சிகள் அதை கடுமையாக எதிர்த்தன. கடந்த டிசம்பர் 7 அன்று மாலை, தமிழக #முதல்வர் எடப்பாடியார் அவர்களை, அவரது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் நான் சந்தித்து, முத்தலாக் மசோதா குறித்து, தமிழக அரசு எடுக்க வேண்டிய நிலைபாடு குறித்து ,மஜக நிர்வாக குழு வடிவமைத்த ஆலோசனைகள் அடங்கிய கடிதத்தை கொடுத்தேன். இவ்விஷயத்தில் சிறுபான்மை முஸ்லிம் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், இதில் சமரசம் கூடாது என்றும் வலியுறுத்தினேன். அம்மாவின் வழியில் ,இவ்விஷயத்தில் நாங்கள் உறுதியாக இருப்போம் என்று முதல்வர் கூறியதுடன், அதிமுக
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரல் இமானுவேல் சேகரன்!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் அறிக்கை) தென் தமிழ் நாட்டில் நிறைந்து வாழும் தேவேந்திர குல வேளாளர் இன மக்களின் உரிமை குரலாக வாழ்ந்த ஐயா. இமானுவேல் சேகரனின் நினைவேந்தல் வருடந்தோறும் செப்டம்பர் 11 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. பின்தங்கிய மக்களின் வாழ்வும், சுயமரியாதையும் மேம்பட உழைத்த தலைவர் அவர். கல்வி, தொழில், சமூக அமைப்பு ஆகியவற்றில் அயராது உழைத்து மேம்படுவது ஒன்றே அவருக்கு செலுத்தும் உயர்வான மரியாதையாகும். இதற்கு அம்மக்களுடன் இணைந்து அனைவரும் பாடுபட உறுதியேற்போம். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 11.09.2018