ரத்ததான சேவை 90 நாட்களில் 150 யூனிட் ரத்ததானம் நாகை மாவட்ட மஜகவின் தொடரும் மனித நேயப் பணிகள்…

ஜூன்,03

தமிழ்நாடு முழுக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணி சார்பில் உயிர் காக்கும் ரத்ததான சேவைகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நாகை மாவட்டத்தில் மட்டும் கடந்த 90 நாட்களில் 150 யூனிட்டுகள் ரத்தம் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளிலிருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோள் தவிர, நேரடி உதவி கோரல்கள் என உதவி கேட்டவர்கள் அனைவருக்கும் ரத்ததானம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நாகை மாவட்ட மருத்துவ சேவை அணி துணை செயலாளர் N. உமர் முக்தார் அவர்கள் தலைமையில் இப்பணி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் ரத்ததான சேவையில் தொடர்ந்து முன்னணி வகிக்கும் மஜகவின் சேவைகளுக்கு தலைவர் மு.தமிமுன் அன்சாரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகை_மாவட்டம்
03.06.2024.