நாகை. ஏப்.22., அரசு மருத்துவமனையில் 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் O.S மணியன் திறந்து வைக்க சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ICU நோயாளிகளுக்கு துணையாக வருபவர்கள், மருத்துவமனையில் ஆங்காங்கே படுத்துறங்குவதை தவிற்பதற்காக, நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் மட்டுமே தங்குவதற்காக இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 840 ச.மீட்டரில் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் ஒரே நேரத்தில் 90 பேர் தங்கிக் கொள்ளலாம். சமையலறை, குளியளறை பொருள் பாதுகாப்பு அறை ஆகிய வசதிகலும் இருக்கிறது. தகவல்: #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம் 22.04.2018
Tag: Mjk
மனிதநேய கலாச்சார பேரவையின் அமீரக செயற்குழு கூட்டம்..!
அமீரகம்.ஏப்.22., மனிதநேய கலாச்சாரப் பேரவையின் (MKP) அமீரக செயற்குழு கூட்டம் இறைவனின் மாபெரும் கிருபையால் கடந்த 20-04-2018 அன்று ஜெபல்அலியில் அமீரக துணை செயலாளர் சகோ Y.அப்துல் ரெஜாக் அவர்கள் இல்லத்தில் இனிதே நடந்தேறியது. கூட்டத்திற்கு அமீரக செயலாளர் சகோ.மதுக்கூர் அப்துல் காதர் அவர்கள் தலைமை வகித்தார். அமீரக பொருளாளர் சகோ. அதிரை அஸ்ரப் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் அமைப்பின் எதிர்கால திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாக செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இறைவன் நாடினால் எதிர்வரும் ரமலானில் மஜக பொது செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை அழைத்து இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவது குறித்தும், ரமலானில் பிஃத்ரா, சதக்கா, ஜகாத் வசூல் செய்வது குறித்தும், தலைமை நிர்வாகிகளை (தாயிகள்) அழைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இறுதியாக அமீரக துணை செயலாளர் சகோ.நாச்சிகுளம் A.அசாலி அஹ்மத் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவேறியது. தகவல்: #MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி #MKP_IT_WING_UAE #மனிதநேய_கலாச்சாரப்_பேரவை ஐக்கிய அரபு அமீரகம்.
ஆசிபாவுக்கு நீதி கேட்டு திருச்சியில் மஜக ஆர்ப்பாட்டம்..! கண்ணீர் சிந்திய இந்து சகோதரிகள்!
திருச்சி. ஏப்.21., இன்று (21.04.18) திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் காவி மத வெறியர்களால் சீரழித்து கொலை செய்யப்பட்ட 8 வயது குழந்தை #ஆசிபா-வுக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த ஆண்களும், பெண்களும், குழந்தைகளோடு பங்கேற்றனர். தலைவர்களின் உருக்கமான உரைகளை கேட்ட பெண்கள் கலங்கினர். ஒரு இந்து சகோதரி கண்ணீர் விட்டு குமுறினார். இன்னொரு பெண்மனி சோகம் கப்பிய முகத்தோடு தன் குழந்தையுடன் வந்து பதாகைகளை ஏந்தி நின்றார். சுற்றுவட்டாரம் எங்கும் வாகனங்களை நிறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தை கவனித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாவட்ட செயலாளர் இப்றாகிம்ஷா, தமிழக வாழ்வுரிமை கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் பெரியார் சரவணன், ஜமாத்துல் உலாமா மாநகர செயலாளர் சிராஜுதின் மன்பஈ, நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் பிரபு, கிறஸ்துவ நல்லென்ன இயக்க பொருப்பாளர் புஷ்பராஜ் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் அஸ்ரப், மாவட்ட துணை செயலாளர்கள் S.M ரபிக், ஷேக் தாவூத், பஷிர், அணி நிர்வாகிகள் சதாம், அப்துல் காதர், J.K காதர், மற்றும்
காவிரி உரிமை போர் தொடர்கிறது! ஏப்ரல்-27 கல்லணையில் ஒன்றுகூடல்! மே-02 தஞ்சை விமான படைதளம் முற்றுகை!
இன்று (21.04.18) தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் அனைத்து விவசாய தலைவர்கள், உணர்வாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பெ.மணியரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, காவிரி ஆற்று பாசன விவசாயிகள் சங்க தலைவர் காவேரி தனபாலன், விவசாய சங்க தலைவர் ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, எதிர்வரும் ஏப்ரல்-27 அன்று காலை 10 மணியளவில் கல்லணையில் பல்லாயிரக்கணக்கான விவாசாயிகளுடன் சென்று 'உறுதி மொழி ஏற்பு ஒன்று கூடல் நடத்துவது' என்றும், அன்றிலிருந்து தொடர் பரப்புரை செய்து, மே-02 அன்று தஞ்சை விமானப் படை தளத்தை முற்றுகையிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், காவிரி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற அணைவர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது! நடைபெற இருக்கும் போராட்டங்களுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவையும், விவசாய அமைப்புகளின் ஆதரவையும், பாரதிராஜா தலைமையிலான "தமிழர் கலை, இலக்கிய பண்பாட்டு பேரவையின்' ஆதரவையும் பெறுவதென்று முடிவு செய்யப்பட்டது
நீதியின் சிகரம் ராஜேந்திர சச்சார் மறைவு! மஜக இரங்கல்..!!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ வெளியிடும் அறிக்கை..) டெல்லி உயர் நீதிமன்ற முனனாள் தலைமை #நீதிபதி #ராஜேந்தர்_சிங்_சச்சார் (94) முதுமை காரணமாக டெல்லியில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் நேர்மையின் அடையாளமாய், நீதியின் சிகரமாய் தனது பணிக்காலத்தில் வாழ்ந்து சென்றார். அவரது தீர்ப்புகள் யாவும் மனிதாபிமானத்தின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. ஓய்வு பெற்ற பிறகு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காக குடிமக்கள் சுதந்திரத்திற்கான சங்கத்தில் இணைந்து பணியாற்றினார். பின்தங்கிய மக்களுக்காக குரல் கொடுத்தார். அதனடிப்படையிலேயே இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மூலம் அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக ராஜேந்திர சிங் சச்சார் இருந்தார். இந்திய முஸ்லிம்களின் வாழ்நிலை, தலித்துகளின் நிலையைவிட மோசமாக இருக்கிறது என்று அந்த அறிக்கை கூறியது. அந்த அறிக்கையின் ஆதார தகவல்கள் நாட்டையே உலுக்கியது. அந்த அறிக்கை நாடெங்கிலும் விவாதிக்கப்பட்டு அதன் பல அம்சங்கள் பல மாநிலங்களில் அமலுக்கு கொண்டுவரப்பட்டன. கடந்த 2013 ஆம் ஆண்டு அவரை டெல்லியில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பத்திரிக்கையாளர் அத்தேஸ் அவர்களும் உடனிருந்தார். சச்சார் கமிட்டி ஆய்வுக்காக