கோவை:ஏப்:02., கோவை தெற்கு பகுதிக்குட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி புதிய கிளை துவக்கம் மற்றும் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்டசெயலாளர் MH.அப்பாஸ் கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். மாநில துணை செயலாளர் A.அப்துல்பஷீர், மாநில செயற்குழு உறுப்பினர் குனிசை ஷாஜகான், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS.அப்பாஸ், ABTபாருக், ரபீக் ஆகியோர் புதியகிளை நிர்வாகிகளை அறிமுகம் செய்து உரையாற்றினார்கள். புதிய நிர்வாகிகள் பட்டியல்... கிளைசெயலாளர் முஜிப்ரஹ்மான் 8428241908 கிளைபொருளாளர் அப்துல்ரஹ்மான் 9944611886 துணை செயலாளர்கள் நவ்சாத் 702266677 முகமதுஅலி9042015066 பசீர் 9042098425 இந்நிகழ்வில் தெற்கு பகுதி செயலாளர் காஜா, பொருளாளர் நிவாஸ், துணைசெயலாளர்கள் குனிசை அப்பாஸ், ஜக்கிரியா, யூசுப் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர் தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 02.04.2017
தமிழகம்
தமிழகம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மஜக மற்றும் மாணவர் இந்தியா சார்பில் தொடர்முழக்க போராட்டம்…
திண்டுக்கல்.ஏப்.02., இன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை ஆதரித்தும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துர் அருகில் கனிம வள ஆராய்ச்சி என்ற பெயரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல் படுத்துவதை கண்டித்தும் தொடர் முழக்க போராட்டம். திண்டுக்கல் மாவட்டம் போகம்பூர் திப்பு திடலில் காலை 11மணிக்கு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜகவின் மாநில துணை செயலாளர் திண்டுக்கல். M.அன்சாரி, கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் பழனி .சாந்து முகம்மது, மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா, மாவட்ட பொருளாளர் U.மரைக்காயர் சேட், மாவட்ட துணை செயலாளர்கள் A.ஹபிபுல்லா(இரயில்வே), உமர் அலி ஆகியோர் கலந்துகொண்டனர். மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் T.முகமது பிர்தெளஸ், மாவட்ட துணை செயலாளர் T.மரிய மனோஜ் ஆகியோர் தலைமையில் மாணவர் இந்தியா நகர செயலாளர் M.தினேஷ் சக்திபாலன், நகர துணை செயலாளர் M.முனாப் தீன், நகர பொருளாளர் S.உமர் முக்தார் ஆகியோர் முன்னிலைவகித்தனர், மாணவர் இந்தியா மாவட்ட பொருளாளர் A.முகமது நவ்ஃபல் வரவேற்புரையாற்றினார். இப்போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள், சமுக ஆர்வளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இறுதியாக மத்திய அரசை கண்டித்து கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. 1. தமிழகத்தில் அமல்படுத்த
வேலூர் மாவட்டம் மஜக சார்பில் மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மற்றும் ஃபிரிசர் பாக்ஸ் அர்ப்பணிப்பு…
வேலூர்.ஏப்.02., இன்று மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் இந்திரா நர்சிங் ஹோம் இணைந்த நடத்திய மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் வேலூர் சைதாப்பேட்டையில் K.M.K திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இம்முகாமினை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.com அவர்கள் துவக்கி வைத்தார்கள். 3-மண்டல செயலாளர் A.முஹம்மத் பாயில் தலைமை தாங்கினார், 30,31,வது கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜாபர், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ஹமித் மற்றும் மண்டல, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இம்மருத்துவ முகாமில் பொது மருத்துவம் அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு மகளிருக்கான பரிசோதனை முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் வரும் அறுவை சிகிச்சைகள் செய்ய இலவசமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன 500 மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்டைந்தார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக அனைத்து சமுதாய மக்களுக்கான ஃபிரீஸர் பாக்ஸ் (குளிர்சாதன பெட்டி) மாநில பொருளாளர் SS. ஹாரூன் ரசீது அவர்கள் அர்ப்பணித்தார்கள். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING வேலூர் (கி) மாவட்டம் 02.04.2017
MF கான் என்னும் மனிதநேயர்…
சென்னை.ஏப்.01., அண்ணா IAS அகாடமியின் முன்னாள் இயக்குனரும் சமூக சேவைகருமான பேரா. MF. கான் அவர்கள் இன்று மரணம் அடைந்தார் (இன்னா லில்லாஹி...) என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.. பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்து ஏராளமான IAS, IPS அதிகாரிகளை உருவாக்கிய சமூக நீதி சிந்தனையாளரை இன்று நாம் இழந்திருக்கிறோம். தனது குடும்ப நிதியில் இருந்து கல்விப் பணிக்காக 1கோடி ரூபாய் தருவதாக கூறி அதற்க்கு சரியான நபர்களை தேடியலைந்தார். அந்தப் பணம் ஏழை எளிய மக்களின் கல்விக்காக நேர்மையாக செலவிடப்பட்ட வேண்டும் என்று நினைத்தார். இது குறித்து பலமுறை என்னிடம் உரையாடிருக்கிறார். அவரது தந்தை தீவிர இடதுசாரி களத்தில் இயங்கியவர் பின் தங்கிய மக்களுக்காக போராடியவர் அதே வழியில் பேரா. MF கானும் இயங்கினார். மனிதநேய ஜனநாயக கட்சியை தொடங்கிய போது தனது வாழ்த்துக்களை வாயார கூறி மகிழ்ந்தார். கடந்த மார்ச் (2016) மாதம் சக்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு அவரது கால் அகற்றப்பட்டது. அவரை பார்க்க நானும் மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மியும் மருத்துவமனைக்கு சென்றோம். அப்போதும் சமூகத்தை பற்றியும், கல்வி குறித்தும் பேசினார். அப்போது சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. திடீர் என்று அருகில் இருந்த தனது
மஜக பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி MLA தலைமையில் கோவை இஸ்லாமிய கூட்டமைப்பினர் அமைச்சரை சந்தித்து மனு…
சென்னை.ஏப்ரல்.01., கோவை சசிக்குமார் கொலை வழக்கில் அபுதாஹிர் என்ற அப்பாவி முஸ்லிம் இளைஞரை கைது செய்த கோவை CB CID காவல் துறை அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்ககோரியும், அபுதாஹிரை விடுதலை செய்யக் கோரியும் மஜக பொதுச் செயலாளர் M.தமீமுன் அன்சாரி MLA தலைமையில் கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் அவர்களை சந்தித்து மனு அளித்தனர். இந்நிகழ்வில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஹாஜி இனாயத்துல்லாஹ் ராஜா உசேன், மஜக மாநில செயலாளர் கோவை சுல்தான் அமீர், மஜக கோவை மாவட்ட செயலாளர் அப்பாஸ், SDPI, INTJ மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல்: தகவல் தொழில் நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம். 01.04.17