நாகை.மே.19., நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்க பெருந்தோட்டத்தில் இன்று 19.05.2017 வெள்ளிக்கிழமை பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இணை பொது செயலாளர் K.M.மைதீன் உலவி மற்றும் மாநில துணை செயலாளர் தோப்புத்துறை ஷேக் அப்துல்லா ஆகியோர் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். இதில் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் N. M.மாலிக் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், கலந்துக்கொண்டனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING நாகை வடக்கு மாவட்டம் 19.05.2017
தமிழகம்
தமிழகம்
IKP தலைமையக நியமன அறிவிப்பு…
மாணவர் இந்தியா 2-நாள் பயற்சி முகாம் : மாணவர்கள் உற்சாகம்…
மகாபலிபுரம்.மே.17., பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தங்களது தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், சமகால அரசியலை புரிந்து கொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் மாணவர் இந்தியா இரண்டு நாள் பயற்சி முகாமை மகாபலிபுரம் அருகில் உள்ள கடம்பாடி கிராமத்தில் 2017 மே-13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்தது. முதல் அமர்வு மாணவர் இந்தியாவின் மாநில செயலாளர் A.அசாருதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ் அவர்கள் “மாணவர்களும் அரசியலும்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். பாலிமர் தொலைக்காட்சியின் மூத்த செய்தியாளர் ரஹ்மான் அவர்கள் இன்றைய "ஊடகங்கள் உண்மையானதா?” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா "மாணவர்களின் அறம்” எனும் தலைப்பிலும் பின்னர் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தார். இரண்டாம் அமர்வு தமிழ்நாடு மாணவர் இயக்கத்தின் தலைவர் இளையராஜா அவர்கள் “மாணவர்கள் ஏன் போராட வேண்டும்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். மாலை தேநீர் இடைவேளைக்கு பிறகு : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் “இன்றைய அரசியலும் மாணவர்களும்” எனும் தலைப்பில் விரிவுரையாற்றினார். தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்து நிகழ்ச்சியை மெருகூட்டினார்.
கோவை மாவட்ட மஜக நிர்வாகக்குழு! மாநில நிர்வாகிகள் பங்கேற்பு!!
கோவை.மே.17., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநில செயலாளர் A.K.சுல்தான் அமீர், மாநில துணை செயலாளர் T.K.அப்துல் பஷீர், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR பதுருதீன், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS அப்பாஸ், சிங்கை சுலைமான், பாருக், ரபீக், அமீர் அப்பாஸ், பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, மாவட்ட தொழிற் சங்க செயலாளர் சுதீர், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை மாவட்ட செயலாளர் ஹனீபா ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 1: பொள்ளாச்சி நகர கூடுதல் பொருப்பாளராக ABT பாருக் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். 2: 15 நாளுக்கு ஒரு முறை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் கூட்டுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 3: கோவைமாவட்ட அலுவலகம் விரைவில் பிரம்மாண்டமாக திறக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம். 16.05.2017
கல்பாக்கம், கேளம்பாக்கம், மகாபலிபுரத்தில் மஜக கொடி ஏற்றும் நிகழ்ச்சி!
காஞ்சி.மே.17., மனிதநேய ஜனநாயக கட்சியின் காஞ்சி தெற்கு மாவட்டம் சார்பாக நேற்று (16.05.2017) கேளம்பாக்கத்தில் 2-இடங்கள், ECR மகாபலிபுரம், கல்பாக்கத்தில் 6-இடங்களிலும் கொடியேற்று விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் யு.ரஹ்மத்துல்லா தலைமை வகிக்க, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏ.முஹம்மது யூசுப், மாவட்ட துணை செயலாளர்கள் கேளம்பாக்கம் கே.அப்துல் சர்தார், கல்பாக்கம் எஸ்.சமியுல்லா, மல்லை ஃபாரூக் ஆகியோர் முன்னிலை வகிக்கத்தனர். மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத் M.com அவர்கள் கொடியேற்றி சிறப்பித்து வைத்தார். மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் திருப்போரூர் ஏ.முஹம்மது ரஃபீக், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் ஜே.பஷீர், து.செயலாளர் இப்ராஹிம் கனி, ஊரப்பாக்கம் காரணைப்புதுச்சேரி கிளை செயலாளர் சுரேஷ், திருக்கழுக்குன்றம் ஹக்கீம் மற்றும் கல்பாக்கம் கிளை செயலாளர் கே.முஹம்மது காலிஃப், முன்னாள் கிளை செயலாளர் எஸ்.உசேன் அலி மற்றும் கிளைகளின் ஏனைய நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பிறகு லுஹர் தொழுகைக்கு பின் அனைவருக்கும் மதிய உணவு வழங்கி கல்பாக்கம் சகோதரர்கள் அசத்தினர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING காஞ்சி தெற்கு மாவட்டம். 17-05-2017