தூத்துக்குடி.செப்.22., மனிதநேய ஜனநாயக கட்சியின் (#மஜக) தூத்துக்குடி தெற்கு மாவட்டம் காயல்பட்டினம் சார்பில் மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன அழிப்புக்கு எதிராகவும், மத்திய அரசை அகதிகளாக வந்த மக்களை வெளியேற்றாதே என வலியுறுத்தியும் காயல்பட்டினம் நகர செயலாளர் #S.M.ஜிப்ரி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. சிறப்பு அழைப்பாளராக மஜக இணைப் பொதுச்செயலாளர் K.M.முகமது மைதீன் உலவி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய சமாதான பேரவை தலைவர் ஹாமித் பக்ரி மன்பயி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் மீரான், தலைமை செயற்குழு உறுப்பினர் நெல்லை அப்துல் வாகித் ஆகியோர் கலந்து கொண்டு கன்டன உரை ஆற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் முகம்மது நஜிப், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் ராசிக் முஸம்மில், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீரா சாகிப், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் ராசுகுட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் செய்யதுஅலி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணை செயலாளர் ராஜா முகம்மது ஆகிய ஜக நிர்வாகிகள் மற்றும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் தலைவர் அபுல் ஹசன் கலாமி, SDPI
தமிழகம்
தமிழகம்
தோழர் திருமுருகன் காந்தி வேலூர் மஜக அலுவலகம் வருகை..!!
வேலூர்.செப்.22., மே-17 இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மற்றும் அவர்களுடைய சக நிர்வாகிகள் இன்று சகோ.பேரறிவாளன் அவர்களை சந்தித்துவிட்டு #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட அலுவலகத்திற்கு வருகை புரிந்து #மஜக சகோதரர்களை சந்தித்தனர். தோழர்களை மஜக வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்புக்குழு தலைவர் #S_G_அப்சர்_சையத் அவர்கள் வரவேற்றார். மேலும் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் பேசுகையில், தோழர் பேரறிவாளன் அவர்களுடையை பரோலிற்காகவும், தன்னுடைய விடுதலைக்காகவும் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தோழர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பெரும்முயற்சி மேற்கொண்டார் எனவும், மேலும் மே-17 இயக்கத்தின் பெரும்பாலான போராட்டங்களில் மஜக மாநில பொருளாளர் தோழர். #S_S_ஹாரூன்_ரசீது அவர்கள் கலந்துகொண்டுள்ளார் என கூறி பெருமிதமடைந்தார். அவர் கூறிய வார்த்தைகள் மஜக தோழர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த இனிய சந்திப்பிற்கு பிறகு தோழர்கள் பிரியாவிடை பெற்றனர். இதில் மஜக மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர். தகவல்; மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம். 22.09.2017
ரோஹிங்யா மக்களுக்கு ஆதரவாக சென்னையில் தமிழர்கள் திரண்டனர்..!
சென்னை.செப்.22., இன்று சென்னையில் மியான்மர் அரசு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக தமிழக கொங்கு இளைஞர் பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜாதி, மத பேதமின்றி ஆயிரக்கணக்கான தமிழர்கள் சென்னையில் அணிதிரண்டனர். கடந்த இரண்டு நாட்களாகவே சென்னை முழுவதும் மூன்று கட்சிகளின் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளும், ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பேனர்களும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன. ரோஹிங்ய மக்களின் கண்ணீரை கூறும் துண்டு பிரசுரங்கள் ஆங்காங்கே விநியோகிக்கப்பட்டன. இதனால் இன்று மதியம் 4 மணி முதலே போராட்டம் நடைபெற்ற துறைமுகம் பகுதியில் கட்சி சார்பற்ற பொதுமக்கள் குழுமத் தொடங்கினர். பாரி முனை எங்கும் மூன்று கட்சிகளின் கொடிகள் ஒன்றுமையை பறை சாற்றும் விதமாக கம்பீரமாக பறந்து அனைவரையும் வரைவேற்றுக் கொண்டிருந்தது. 4:30 மணிக்கெல்லாம் காஞ்சி, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களை சேர்ந்த மஜகவினர் வாகனங்களில் ரோஹிங்ய மக்களுக்கு ஆதரவாக முழக்க மிட்டபடியே பாரிமுனை பகுதியில் நுழையத் தொடங்கினர். அதுபோல கொங்கு இளைஞர் பேரவையினரும், முக்குலத்தோர் புலிப்படையினரும் " நமது மாமன் - மச்சான்களுக்கு குரல் கொடுப்போம்" என்ற முழக்கங்களோடு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழுக்கங்களை எழுப்பியப்படியே அலை, அலையாய்
மஜக திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம்..!
திருப்பூர்.செப்.21., மனிதநேய ஜனநாயக கட்சி(மஜக) திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் S.A.முஸ்தாக் அஹமது வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் முக்கிய அஜண்டாவாக வருகின்ற 24_09_2017 ஞாயிற்றுக் கிழமை கோவை மாநகர் மாவட்டம் சார்பில் வின்செண்ட் ரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டம் குறித்து விரிவாக பேசப்பட்டது. மாவட்ட செயலாளர் ஹைதர் அலி அவர்கள் பேசும் போது தற்போதைய அரசியல் அரங்கில் அதிர்வலைகள் ஏற்படுத்தி வரும் மூன்று MLA க்கள் நமது மஜக பொதுச்செயலாளர் #எம்_தமிமுன்_அன்சாரி_MLA, கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் #உ=தனியரசு_MLA, முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் #சேது_கருணாஸ்_MLA, ஆகியோரை சரியான நேரத்தில். இந்த முத்தான மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து கோவை மாவட்ட நிர்வாகம் மிக பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ளார்கள், மேலும் கோவையில் நடைபெறும் பணிகளை பார்த்தால்., நடக்க இருப்பது பொதுக்கூட்டமா அல்லது மாநாடா என வியக்கும் வகையில் உள்ளது., பாசிச வாதிகள் மக்களை பிளவு படுத்த துடிக்கும் நேரத்தில்., '' பாசிசத்தை வீழ்த்துவோம் சமூக நீதியை வென்றெடுப்போம் " என்ற ஒற்றை முழக்கத்தோடு நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில், திருப்பூர் மாவட்டத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர்
மஜக கோவை மாவட்ட செயற்குழு கூட்டம்..!
கோவை.செப்.21., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நேற்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன் மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், ABT.பாருக், இளைஞரணி மாவட்ட செயலாளர் PMA.பைசல், மாணவர் இந்தியா மாவட்டசெயலாளர் K.செய்யது இப்ராஹிம், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் A.அபு, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் நூருல் அமீன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் M.சம்சுதீன், சுற்றுச் சூழல் அணி மாவட்ட செயலாளர் AK.முஹம்மது சலீம் மற்றும் பகுதி செயலாளர்கள் பூ.காஜா, ஜமால், ஜாபர் அலி, காஜா உசேன், சமீர் அலி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டன... 1.வருகின்ற 24.9.17அன்று நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு அதிகமான மக்களை திரட்டி சிறப்பாக கூட்டத்தை நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 20.09.17