தோழர் திருமுருகன் காந்தி வேலூர் மஜக அலுவலகம் வருகை..!!

image

image

வேலூர்.செப்.22., மே-17 இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மற்றும் அவர்களுடைய சக நிர்வாகிகள் இன்று சகோ.பேரறிவாளன் அவர்களை சந்தித்துவிட்டு #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட அலுவலகத்திற்கு வருகை புரிந்து #மஜக சகோதரர்களை சந்தித்தனர்.

தோழர்களை மஜக வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்புக்குழு தலைவர் #S_G_அப்சர்_சையத் அவர்கள் வரவேற்றார்.

மேலும் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் பேசுகையில், தோழர் பேரறிவாளன் அவர்களுடையை பரோலிற்காகவும், தன்னுடைய விடுதலைக்காகவும் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தோழர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பெரும்முயற்சி மேற்கொண்டார் எனவும், மேலும் மே-17 இயக்கத்தின் பெரும்பாலான போராட்டங்களில் மஜக மாநில பொருளாளர் தோழர். #S_S_ஹாரூன்_ரசீது அவர்கள் கலந்துகொண்டுள்ளார் என கூறி பெருமிதமடைந்தார். அவர் கூறிய வார்த்தைகள் மஜக தோழர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த இனிய சந்திப்பிற்கு பிறகு தோழர்கள் பிரியாவிடை பெற்றனர்.

இதில் மஜக மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

தகவல்;
மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்.
22.09.2017