(மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) தமிழக #வக்பு_வாரிய-த்தின் புதிய தலைவராக தேர்வு செய்யபட்டிருக்கும் ஜனாப் #அன்வர்_ராஜா_MP அவர்களுக்கு #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். வளமான சொத்துக்களை கொண்ட வக்பு வாரியம் நிர்வாக சீர்கேடுகளாலும், ஊழலாலும் ஸ்தம்பித்து கிடக்கிறது. முஸ்லிம் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக கடந்த காலத்தில் மன்னர்களாலும், தளபதிகளாலும், செல்வந்தர்களாலும், கொடையாளர் களாலும் வாரி வழங்கப்பட்ட சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கவும், இருக்கும் சொத்துக்களை பாதுகாக்கவும் ஜனாப் அன்வர் ராஜா MP அவர்கள் நேர்மையான முறையில், சிறப்பாக பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். முத்தலாக் மசோதா குறித்து பேசிய அவரது நாடாளுமன்ற உரைக்கு பிறகு அவர் மீதான எதிர்பார்ப்பு முஸ்லிம் சமுதாய மக்களிடம் அதிகமாக இருக்கிறது என்பதை இத்தருணத்தில் நினைவு படுத்தி அவருக்கு எமது நல்வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA, #பொதுச்_செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 30.04.2018
அறிக்கைகள்
மஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்..!
அறந்தாங்கி.ஏப்.25., #மனிதநேய_ஜனநாயக_கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 25.04.18 புதன் காலை 10.30 மணியளவில் அறந்தாங்கி கிருஷ்ணபவன் ஹோட்டல் மேல்தளத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் #இ_முபாரக்_அலி தலைமை தாங்கினார், #தகவல்_தொழில்நுட்ப_அணி மாநில செயலாளர் #ஏ_எம்_ஹாரிஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் எம்.பி.சேக் இஸ்மாயில் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர்கள் பி.அஜ்மீர் அலி, மற்றும் எஸ்.ஒளி முகம்மது தீர்மானங்களை முன்மொழிந்தனர். இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் செய்யது அபுதாஹிர் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளர் எ.அப்துல் ஹமீது, மாவட்ட தகவல், தொழில்நுட்ப அணிச் செயலாளர் அ.அப்துல் ஜமீன், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் கே.ஷாஜஹான், அறந்தாங்கி நகர செயலாளர் டி.ஜகுபர் சாதிக், நகர பொருளாளர் அ.அப்துல் கரீம், ஆகியோர் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர். இந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. 1. பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவேண்டும். நடிகர் எஸ்.வி. சேகர் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி கொச்சையான கருத்தை கூறி இருந்தார். அவரது கருத்துக்கு பத்திரிகையாளர்கள் உணர்வுபூர்வமாய் எதிர்ப்பை காட்டினார்கள். இதற்காக 30 செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது பல வழக்குகளை பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. உயிரையும்
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்…
மோடிக்கெதிராக கருப்புக்கொடி காட்டிய போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட மஜக பொருளாளர் ஹாருன் ரசீது, மஜக நிர்வாகிகள் புதுப்பேட்டை யூசுப், பல்லாவரம் அப்துல்லா, பல்லாவரம் அப்துல் சமது, தாம்பரம் சலீம், அஜ்மல் கான், ஷேக் கஜினி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த 19 பேருக்கும் செங்கல்பட்டு செஷன்ஸ் கோர்ட்டில் பெயில் கிடைத்திருக்கிறது. எல்லா புகழும் இறைவனுக்கே. அனைவரும் அநேகமாக இன்று மாலை விடுதலை செய்யபடுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. எமக்காக குரல் கொடுத்த அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், காவிரி போராட்ட தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள். பொருளாளர் ஹாரூன் ரசீது உள்ளிட்ட மஜகவினர் ஏழு பேரையும் வரவேற்க, தலைமை நிர்வாக குழு உறுப்பினர் ஏ.எஸ் அலாவுதீன் தலைமையில் வரவேற்பு குழு அமைப்பட்டுள்ளது. (தொடர்புக்கு : 04443514550) தொடர்புக்கு: எமது காவிரி உரிமை போராட்டம் சமரசமின்றி தொடரும்... இவண்; மு.தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி, 24/04/2018.
பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்..! தமிமுன் அன்சாரி MLA, தனியரசு MLA, கருணாஸ் MLA வேண்டுகோள்..!!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் எஸ்.கருணாஸ் MLA, ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை..) பாஜக பிரமுகர்களான H.ராஜா அவர்களும், S.V சேகர் அவர்களும் சமீபத்தில் பெண்கள் குறித்து வெளியிட்ட கருத்துகள் நேர்மையான அரசியலுக்கும், நாகரீக பொதுவாழ்வுக்கும் எதிரானதாகும். பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் சமூகமே, நாகரீக சமூகமாகும். பெண்களை தரக்குறைவாக விமர்சிக்கும் நபர்கள் இத்தகைய பட்டியலில் இடம் பெற முடியாது. S.V.சேகர் அவர்கள் வேறு ஒருவருடைய கருத்தை, கவனக்குறைவாக பகிர்ந்ததாக கூறியதை ஏற்காத, பத்திரிக்கையாளர்கள் அவர் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதில் சிலர் கோபத்தில் கல்வீச்சில் ஈடுபட்டது ஏற்புடைய செயல் அல்ல, அதே நேரம் H. ராஜா அவர்களையும், S.Vசேகர் அவர்களையும் கைது செய்ய தயங்கும் காவல்துறை, S.V சேகர் வீட்டின் மீது கல்வீச்சு நடத்திய பத்திரிக்கையாளர்களை மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய துடிப்பதன் பிண்ணனி என்ன? என்பதை அறிய விரும்புகிறோம். டெல்லியிலிருந்து, தமிழகத்தில் செயல்படும் ஊடகளுக்கும், அதன் ஆசிரியர்களுக்கும் திட்டமிட்டு கொடுக்கப்படும் நெருக்கடிகளை தமிழகம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு, இவ்விஷயத்தில்
காவிரி உரிமை போர் தொடர்கிறது! ஏப்ரல்-27 கல்லணையில் ஒன்றுகூடல்! மே-02 தஞ்சை விமான படைதளம் முற்றுகை!
இன்று (21.04.18) தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் அனைத்து விவசாய தலைவர்கள், உணர்வாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பெ.மணியரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, காவிரி ஆற்று பாசன விவசாயிகள் சங்க தலைவர் காவேரி தனபாலன், விவசாய சங்க தலைவர் ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, எதிர்வரும் ஏப்ரல்-27 அன்று காலை 10 மணியளவில் கல்லணையில் பல்லாயிரக்கணக்கான விவாசாயிகளுடன் சென்று 'உறுதி மொழி ஏற்பு ஒன்று கூடல் நடத்துவது' என்றும், அன்றிலிருந்து தொடர் பரப்புரை செய்து, மே-02 அன்று தஞ்சை விமானப் படை தளத்தை முற்றுகையிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், காவிரி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற அணைவர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது! நடைபெற இருக்கும் போராட்டங்களுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவையும், விவசாய அமைப்புகளின் ஆதரவையும், பாரதிராஜா தலைமையிலான "தமிழர் கலை, இலக்கிய பண்பாட்டு பேரவையின்' ஆதரவையும் பெறுவதென்று முடிவு செய்யப்பட்டது