அன்வர் ராஜாவுக்கு வாழ்த்துக்கள்..!

(மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..)

தமிழக #வக்பு_வாரிய-த்தின் புதிய தலைவராக தேர்வு செய்யபட்டிருக்கும் ஜனாப் #அன்வர்_ராஜா_MP அவர்களுக்கு #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

வளமான சொத்துக்களை கொண்ட வக்பு வாரியம் நிர்வாக சீர்கேடுகளாலும், ஊழலாலும் ஸ்தம்பித்து கிடக்கிறது.

முஸ்லிம் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக கடந்த காலத்தில் மன்னர்களாலும், தளபதிகளாலும், செல்வந்தர்களாலும், கொடையாளர் களாலும் வாரி வழங்கப்பட்ட சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கவும், இருக்கும் சொத்துக்களை பாதுகாக்கவும் ஜனாப் அன்வர் ராஜா MP அவர்கள் நேர்மையான முறையில், சிறப்பாக பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

முத்தலாக் மசோதா குறித்து பேசிய அவரது நாடாளுமன்ற உரைக்கு பிறகு அவர் மீதான எதிர்பார்ப்பு முஸ்லிம் சமுதாய மக்களிடம் அதிகமாக இருக்கிறது என்பதை இத்தருணத்தில் நினைவு படுத்தி அவருக்கு எமது நல்வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்;
#மு_தமிமுன்_அன்சாரி_MLA,
#பொதுச்_செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
30.04.2018