‌மே தினத்தை முன்னிட்டு முத்துப்பேட்டை நகர மஜக சார்பில் நடைபாதை வியாபாரிகளுக்கு கைக்குடை வழங்கும் நிகழ்ச்சி..!

திருவாரூர்.மே.01., இன்று மே 01 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக தொழில்சங்கம் (MJTS) சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகர மஜக சார்பில் நடைபாதை
சிறு வியாபாரிகளுக்கு கைக்குடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்

முத்துப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் திரு ராஜேஸ் அவர்கள்
இது ஒரு அரசியல் கட்சியின் நிகழ்ச்சி என்ற போதிலும் நல்ல ஒரு சேவையை முன்னெடுத்துள்ளீர்கள் என்று கூறி உற்சாகத்தோடு கலந்துகொண்டு
வியாபாரிகளுக்கு குடைகளை வழங்கி துவக்கி வைத்தார் இதில் காவல் துறை உதவி ஆய்வாளர் திரு கனபதி அவர்களும் கலந்துகொண்டு வியாபாரிகளுக்கு குடைகளை வழங்கினார்.

ஏழை சிறு வியாபாரிகள்
சாலை யோர நடைபாதையில் அன்றாடங்காய்ச்சிகளாய் பிழைப்பு நடத்துபவர்கள் வெயிலின் கடும் வெப்பத்தால் அவதிப்படுவதை கன்ட முத்துப்பேட்டை நகர மஜகவினர் தங்களால் இயன்ற உதவியாக முதற்கட்டமாக நிழலுக்கான குடைகளை வழங்க சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் மஜக நகர நிர்வாகிகள் பஷீர் அலி, முகமது மைதீன், அஜ்மீர் கான், பாஷித் உட்பட ஏராளமான மஜகவினரும் கலந்துகொண்டனர் சிறப்பித்தனர்

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_முத்துப்பேட்டை_நகரம்
01.05.2018