குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல து.செயலாளராக சகோ. நெல்லை அப்துல் வாஹிது அவர்களும், மக்கள் தொடர்பு செயலாளராக (PRO) சகோ. பொதக்குடி சதக்கத்துல்லாஹ் அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. மண்டல, கிளை நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தறுமாறு கேட்டு கொள்ளபடுகிறது. புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் பணி சிறக்க வல்ல ரஹ்மான் உதவி செய்வானாக. மனிதநேய கலாச்சார பேரவை மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING குவைத் மண்டலம் 55278478 - 55260018 - 60338005 E-mail: mjkkuwait@gmail.com
செய்திகள்
தாமிரபரணியை பாதுகாக்க மஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி. மார்ச்.13., தூத்துக்குடி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் "தாமிரபரணி ஆற்றில் நீர் எடுக்கும் பன்னாட்டு ஆலைகளுக்கு நிரந்தர தடைவிதிக்க கோரியும்"", ""தூத்துக்குடி மாவட்டத்தை சுடுகாடாக மாற்றத்துடிக்கும் ஸ்டெர்லைட் மற்றும் DCW ஆலைகள் தண்ணீர் எடுக்க தடை கோரியும்"", ""மீனவ இளைஞர் பிரிட்சோவை சுட்டுக்கொன்ற இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய மோடி அரசை கண்டித்தும்"" நேற்று 12-03-2017 மாலை ஆத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் ஜாஹீர் உசேன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் நவாஸ், மாவட்ட துணை செயலாளர் காதர் பாட்சா ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட துணை செயலாளர் முகம்மது நஜீப் வரவேற்புரையாற்றினார். மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.Mcom., அவர்களும், திராவிட விடுதலைக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் #பால்_பிரபாகரன் அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் #அகமது_இக்பால் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் #அழகு_முத்துப்பாண்டியன் அவர்களும், மஜகவின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் #மீரான் அவர்களும், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் #கலீல்_ரஹ்மான் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இறுதியாக ஆத்தூர் நகர் செயலாளர் அன்வர் நன்றி கூறினார். தகவல்
திண்டுக்கல்லில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA பேட்டி!
திண்டுக்கல் : மார்ச் 12,R.K.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பாடுபடும்...! மாணவர்கள் இளைஞர்களின் போராட்டங்கள் எதிர்கால தமிழக அரசியலை தீர்மானிக்கும். வங்ககடலில் இனி ஒரு தமிழக மீனவன் கொல்லப்படுவதை தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். மத்திய அரசு இவ்விசயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா அம்மா அவர்களின் மறைவு, கலைஞரின் உடல்நலக்குறைவு ஆகியவற்றால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை. அதிமுகவை பிளக்க பிஜேபி முயற்சிக்கிறது, திராவிட கட்சிகளை அழிக்க துடிக்கிறது, தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் ஒருகாலத்திலும் காலூண்ற முடியாது. உத்தர பிரதேசத்தில் பாஜக வெற்றிப்பெற்றது அதிர்ச்சியளிக்கிறது. மதச்சார்பற்ற, சமூகநீதி சக்திகளுக்கு இது தற்காலிக பின்னடைவாகும். மணிப்பூரில் 16 ஆண்டு காலம் அந்த மக்களுக்காக தன்னையே தியாகம் செய்த ஐரோம் ஷர்மிளாவுக்கு 90 வாக்குகள் மட்டுமே கிடைத்தது ஏமாற்றமளிக்கிறது. தியாகத்திற்கு மரியாதை இல்லையோ என தோன்றுகிறது. இவ்வாறு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் திண்டுக்கல்லில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பேட்டியின்போது இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா, தலைமை
கொல்லப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு மஜக பொருளாளர் நேரில் ஆறுதல்!
இராமநாதபுரம்.மார்ச்.11., இலங்கை கடற்படையினால் படுகொலை செய்யபட்ட இராமநாதபுரம் தங்கச்சிமடத்தை சார்ந்த சகோதரர் Tk.பிரிட்ஜோ அவர்களின் இறப்பிற்கு ஆறுதல் கூருவதற்க்காக மஜக மாநிலபொருளாளர் எஸ்.எஸ். ஹாருன்ரசீத் M.com, அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் வருகை புரிந்தார். சகோதரின் இழப்பிற்கு ஆறுதல் கூறி மத்தியஅரசுக்கும் இலங்கை அரசிற்கும் எதிராக மஜக சார்பில் அவர்களின் கண்டனத்தை பதிவு செய்தார்கள். பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டுகருத்தை தெரிவித்தார்கள். உடன் மஜக இராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர் பட்டினம் மற்றும் இளையான்குடி நகரம் நிர்வாகிகள் உட்பட100க்கும் அதிகமானோர் பங்கு கொண்டனர்... தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி. மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING இராமநாதபுரம் மாவட்டம். 11.03.2017
மஜகவின் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் செயற்குழு கூட்டம்…
புதுகை.மார்ச்:11., புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு கூட்டம்... தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர் அவர்கள் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் ராவுத்தர்ஷா முன்னிலையிலும் நடைப்பெற்றது... மாவட்ட செயலாளர் துரைமுஹம்மது வரவேற்று பேசினார் இந்த கூட்டத்தில் தலைமையின் அறிவுறுத்தலின்படி நிர்வாக சீர்திருத்ததிற்க்காக அறந்தாங்கியை தலைமையிடமாக கொண்டு புதுக்கோட்டை கிழக்கு மாவட்டமாக அறிவிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்... இந்த கூட்டத்தில் மாநில தொழில் நுட்ப அணி செயலாளர் கோட்டை முஹம்மது ஹாரீஸ், மாவட்ட துணைச்செயலாளர் முஹம்மது ஜான் மாவட்ட பொருலாளர் ரஹீம் தாலிஃப், அறந்தை அஜ்மீர் அலி, அப்துல்ஹமீது, முபாரக்அலி, நகரச்செயலாளர் முஹம்மது குஞ்சாலி உட்பட மகஜ தொண்டர்களும் நிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்... முடிவில் மாவட்ட பொருலாளர் ரஹீம்தாலிஃப் நன்றி கூறினார். #தகவல்_தொழில்_நுட்பஅணி #மனிதநேய_ஜனநாயக_கட்சி #MJK_IT_WINK #புதுக்கோட்டை_மாவட்டம்