​தாமிரபரணியை பாதுகாக்க மஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

  

தூத்துக்குடி. மார்ச்.13.,  தூத்துக்குடி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் “தாமிரபரணி ஆற்றில் நீர் எடுக்கும் பன்னாட்டு ஆலைகளுக்கு நிரந்தர தடைவிதிக்க கோரியும்””, “”தூத்துக்குடி மாவட்டத்தை சுடுகாடாக மாற்றத்துடிக்கும் ஸ்டெர்லைட் மற்றும் DCW ஆலைகள் தண்ணீர் எடுக்க தடை கோரியும்””, “”மீனவ இளைஞர் பிரிட்சோவை சுட்டுக்கொன்ற இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய மோடி அரசை கண்டித்தும்””  

நேற்று 12-03-2017 மாலை ஆத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் ஜாஹீர் உசேன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் நவாஸ், மாவட்ட துணை செயலாளர் காதர் பாட்சா ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட துணை செயலாளர் முகம்மது நஜீப் வரவேற்புரையாற்றினார்.

மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.Mcom., அவர்களும், திராவிட விடுதலைக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் #பால்_பிரபாகரன் அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் #அகமது_இக்பால் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் #அழகு_முத்துப்பாண்டியன் அவர்களும், மஜகவின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் #மீரான் அவர்களும், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் #கலீல்_ரஹ்மான் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இறுதியாக ஆத்தூர் நகர் செயலாளர் அன்வர் நன்றி கூறினார்.
தகவல் தொழில்நுட்ப அணி

மனிதநேய ஜனநாயக கட்சி

#MJK_IT_WING

தூத்துக்குடி மாவட்டம்

12-03-2017