வேலூரில் மஜக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!

வேலூர்.ஏப்.17., மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி 2_ம் மண்டல செயலாளர் சையத் கலீம் தலைமையில் நடைப்பெற்றது.

3_ம் மண்டல நிர்வாகிகள் முஹம்மத் பாயிஸ், ஷேக் இம்ரான், அஸ்கர் அலி, ரிஸ்வான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முஹம்மத் யாஸீன் அவர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்.

பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர், வெள்ளரி, தர்பூசணி ஆகியவை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சையத் உசேன், மருத்துவ சேவை அணி செயலாளர் சையத் காதர், இளைஞர் அணி துணை செயலாளர் சாதிக், 30வது கிளை துணை செயலாளர் அமானுல்லாஹ், அப்சர் பாஷா, முஜாயத், சல்மான் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்.
17.04.2018