திருச்சி.ஜுன்.02., இன்று இறைச்சிக்காக பசு, காளை, எருமை மாடுகளையும், ஒட்டகத்தையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடைவிதித்த மத்திய அரசின் சட்டத்தை திரும்ப பெறக்கோரி திருச்சியில் தலைமை தபால் நிலையத்தில் மத்தியில் ஆளும் பாசிச மோடி அவர்களுக்கு மாட்டுகறி அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. மிருகங்கள் வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து மேலும் மாடு மற்றும் ஒட்டகத்தை பலியிடவும் பாஜக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்த போராட்டத்தில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரஷீது M.com அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இப் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, பொருளாளர் அசரப்அலி, மாவட்ட துணை செயலாளர்கள் ஷேக்தாவூத், ரஃபிக், ஜம்ஜம் பஷீர், காட்டுர் பஷீர் ஆகியோர், மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர், சென்னை அன்வர், மாணவர் இந்தியா மொய்தீன் அப்துல்காதர், தொழில் சங்கம் G.K.காதர், அயூப் கான், இளைஞர் அணி தென்னூர் சதாம், ஊடக பிரிவு முஹம்மது அலிசேட் ஆகியோருடன் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், கலந்துகொண்டு ஏராளமானோர் கைதாகினார்கள். தகவல்: தகவல் தொழில் நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING திருச்சி மாவட்டம். 02.06.2017
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
மஜகவினர் கோவையில் மோடி உருவபொம்மை எரிக்க முயற்ச்சி 200க்கும் மேற்பட்டோர் கைது !!
கோவை.ஜூன்.01., இன்று இறைச்சிக்காக பசு, காளை, எருமை மாடுகளையும், ஒட்டகத்தையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்த மத்திய அரசின் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்த தடையின் மூலம் விவசாயிகள், தலித், சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விரோதமான போக்கை அப்பட்டமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளிப்படுத்தி உள்ளது. மிருகங்கள் வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து மேலும் மாடு மற்றும் ஒட்டகத்தை பலியிடவும் பாஜக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்த முற்றுகை போராட்டம் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாநிலச் செயலாளர் சுல்தான் அமீர், மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், ரபீக், சிங்கை சுலைமான், பொள்ளாச்சி நகர செயலாளர் ஜெமீஷா ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் மாவட்ட, பகுதி, கிளை,
கோவை மஜக நிர்வாகிகளுடன் தெற்கு மண்டல மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு!
கோவை.மே.30., மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் சுல்தான் அமீர் அவர்களை மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்து மாட்டிறைச்சி தடையால் தற்போது அவர்கள் சந்தித்து வரும் பல்வேறு நெருக்கடிகள் குறித்து தெரிவித்தனர். பின்னர் 01.06.2017 வியாழன் அன்று மஜக சார்பில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து நடைபெறும் ரயில்நிலைய முற்றுகை போராட்டத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தாங்களும் கலந்துகொள்வதாக தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாநிலசெயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட செயலாளர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் பதுருதீன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல் மற்றும் ஆத்துப்பாலம் அபு ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 30.05.2017
ஆளுநர் சந்திப்பில் மஜக பொருளாளர் ஹாரூன் ரஷீது பங்கேற்பு…
சென்னை.ஏப்.18., தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கடந்த ஏப்ரல் 8ம் தேதி சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி, விவசாயிகள் சங்க தலைவர்கள் கூட்டத்தில் மேதகு ஆளுநர் வித்யாசாகர்ராவ் மூலமாக பிரதமர் மோடியை வலியுறுத்தி தீர்மானங்களை அனுப்பி வைப்பது என முடிவெடுக்கபட்டது. அதன்படி இன்று சந்திப்பதற்கு ஆளுநர் மாளிகை அனுமதி வழங்கியிருந்தது, அதனை தொடர்ந்து அனைத்து கட்சி தலைவர்கள் ஆளுநரை சந்தித்து இன்று (18.04.2017) காலை 11 மணியளவில் கோரிக்கை மனுவினை ஆளுநரிடம் அளித்தனர். தமிழக ஆளுநர் வித்யசாகர் ராவை விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது M.Com, காங்கிரஸ் கட்சி சார்பில் பவன்குமார், தமாகா சார்பில் கோவை தங்கம், விடியல் சேகர், விவசாயிகள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் சிவராஜசேகரன், ஜல்லிக்கட்டு மாணவர் இளைஞர் அமைப்பு சார்பில் வேலு, காயத்திரி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த 17 பிரதிநிதிகள் சந்தித்து விவசாயிகளுக்கான கோரிக்கை மனுவை அளித்தார்கள். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING சென்னை 18-04-2017
திண்டுக்கல் மாவட்ட மஜக-வின் சார்பாக SP அலுவலகம் முற்றுகை போராட்டம்…
திண்டுக்கல். ஏப்.17., இன்று காலை 11-மணியலவில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, பிலாத்து கிராம மக்களின் அமைதியை சீர்குலைத்து பெண்களை கேலிக்கூத்து செய்து வரும் ஆண்டிகுளம் ஊரை சேர்ந்த முருகேசன் என்பவர் நாகலெட்சுமி என்ற பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதை வடமதுரை காவல் நிலையத்தில் ஊர் பொது மக்கள் சார்பாக புகார்அளிதனர், எந்த பலனும் இல்லாத நிலையில் திண்டுக்கல் மாவட்ட SP திரு.சரவணன் அவர்கள் கவனத்திற்கு கொண்டு வந்துனர். இவை அனைத்தையும் கண்டுகொள்ளாமல், நீதிக்கு புறம்பான செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் காவலர்களையும், அதற்கு உறுதுணையாகவும், தொடர்ச்சியாக ஒருதலை பட்சமாக செயல்பட்டு வரும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர். திரு.சரவணன் அவர்களை கண்டித்து SP அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது . இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா தலமையில், மாவட்ட பொருலாளர் U.மரைக்காயர் சேட் முன்னிலையில், மாநில இணை பொதுசெயலாளர் K.M.முகம்மது மைதீன் உலவி மற்றும் மாநில துணை செயலாளர் திண்டுக்கல் M.அன்சாரி ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். உடன் மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் பழனி சாந்து முகம்மது, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர்