திண்டுக்கல் மாவட்ட மஜக-வின் சார்பாக SP அலுவலகம் முற்றுகை போராட்டம்…

image

image

image

திண்டுக்கல். ஏப்.17., இன்று காலை 11-மணியலவில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, பிலாத்து கிராம மக்களின் அமைதியை சீர்குலைத்து பெண்களை கேலிக்கூத்து செய்து வரும் ஆண்டிகுளம் ஊரை சேர்ந்த முருகேசன் என்பவர் நாகலெட்சுமி என்ற பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதை வடமதுரை காவல் நிலையத்தில் ஊர் பொது மக்கள் சார்பாக புகார்அளிதனர், எந்த பலனும் இல்லாத நிலையில்   திண்டுக்கல் மாவட்ட SP திரு.சரவணன் அவர்கள் கவனத்திற்கு கொண்டு வந்துனர்.

இவை அனைத்தையும் கண்டுகொள்ளாமல், நீதிக்கு புறம்பான செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் காவலர்களையும், அதற்கு உறுதுணையாகவும், தொடர்ச்சியாக ஒருதலை பட்சமாக செயல்பட்டு வரும்
திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர்.

திரு.சரவணன் அவர்களை கண்டித்து SP அலுவலகம் முற்றுகை போராட்டம்  நடந்தது .

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா தலமையில், மாவட்ட பொருலாளர் U.மரைக்காயர் சேட் முன்னிலையில், மாநில இணை பொதுசெயலாளர்  K.M.முகம்மது மைதீன் உலவி மற்றும் மாநில துணை செயலாளர் திண்டுக்கல் M.அன்சாரி ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.

உடன் மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் பழனி சாந்து முகம்மது, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பிர்தெளஸ், துணை செயலாளர் முனாப் தீன், நகர செயலாளர் தினேஷ் சிவ பாலன், மஜக திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் குனசேகரன், வடமதுரை ஒன்றிய செயலாலர் முருகேசன், முன்னால் மாவட்ட நிர்வாகிகள் ஹபீப் ரஹ்மான், அபூ ராஜா, உமர் அலி, ஹக்கிம் சேட், மனோஜ்,
அனிபா,பாபு, ஷாஜகான், சேக், நிஸ்தார் உட்பட பல்வேறு  நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இறுதியாக மஜக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட செயலாளர் M.அனஸ் முஸ்தபா நன்றியுரை ஆற்றினார்.

300க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களை கைது செய்யப்பட்டு கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

தகவல் :-

தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
திண்டுக்கல் மாவட்டம்.
17/04/2017.