எழுச்சியுடன் நடைபெற்ற மஜக தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!

image

image

image

தஞ்சை. ஏப்.16., மனிதநேய ஜனநாயக கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று (16.04.17) மாலை 7.00 மணியளவில் குடந்தை அனஸ் ரெஸ்டாரெண்ட்டில் மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட பொருளாளர் இக்பால் சேட் அவர்கள் நீதி போதனையாற்றினார்.

தமிழக விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்துவரும் மத்திய மோடி அரசை கண்டித்து எதிர்வரும் 19.04.2017 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு குடந்தையில் ரயில் முற்றுகை போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மஜக விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக் அவர்கள் தமிழக விவசாயிகள் படும் துன்பங்கள் குறித்து கூறினார்கள்.

மாநில துணைச் செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லா அவர்கள் ரயில் முற்றுகை போராட்டத்தை எவ்வாறு திட்டமிட்டு செயல்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்கள்

அதனை தொடர்ந்து ஏப்ரல்.30 அன்று சோழபுரம் பொதுக்கூட்டம் அழைப்பு
பணிகள் எவ்வாறு திட்டமிட்டு செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இறுதியாக குடந்தை ஒன்றிய செயலாளர் முஹம்மது யாசின் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
தஞ்சை வடக்கு
16.04.2017.