திருச்சியில் மோடிக்கு மாட்டுகறி அனுப்பும் போராட்டம்..! மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீத் பங்கேற்பு…!!

image

image

image

image

திருச்சி.ஜுன்.02., இன்று
இறைச்சிக்காக பசு, காளை, எருமை மாடுகளையும், ஒட்டகத்தையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடைவிதித்த மத்திய அரசின் சட்டத்தை திரும்ப பெறக்கோரி திருச்சியில் தலைமை தபால் நிலையத்தில் மத்தியில் ஆளும் பாசிச மோடி அவர்களுக்கு மாட்டுகறி அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

மிருகங்கள் வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து மேலும் மாடு மற்றும் ஒட்டகத்தை பலியிடவும் பாஜக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

இந்த போராட்டத்தில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரஷீது M.com அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இப் போராட்டத்தில்  மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, பொருளாளர் அசரப்அலி, மாவட்ட துணை செயலாளர்கள் ஷேக்தாவூத், ரஃபிக், ஜம்ஜம் பஷீர்,
காட்டுர் பஷீர் ஆகியோர்,

மற்றும் மாநில செயற்குழு
உறுப்பினர் அபுதாஹிர்,
சென்னை அன்வர், மாணவர் இந்தியா மொய்தீன் அப்துல்காதர்,
தொழில் சங்கம் G.K.காதர், அயூப் கான், இளைஞர் அணி
தென்னூர் சதாம், ஊடக பிரிவு
முஹம்மது அலிசேட் ஆகியோருடன் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், கலந்துகொண்டு ஏராளமானோர் கைதாகினார்கள்.

தகவல்:
தகவல் தொழில் நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
#MJK_IT_WING
திருச்சி மாவட்டம்.
02.06.2017