நாகையில் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு மு தமிமுன் அன்சாரி MLA பாராட்டு!


செப்.8,

இவ்வாண்டு 2020 நல்லாசிரியருக்கான விருதினை நாகை தொகுதியை சேர்ந்த திருமதி நா.கலாராணி (திட்டச்சேரி), க.விஜயலெட்சுமி (நாகூர்), க.வசந்தா (நாகப்பட்டினம்) ஆகிய மூன்று தலைமையாசிரியைகள் பெற்றுள்ளனர்.

அவர்களை MLA அலுவலகம் வரவழைத்து மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் சிறப்பு செய்தார்.

அவர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவு கேடயங்களை வழங்கினார்.

அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவவலர் திரு.குணசேகரன், சென்ற வருடம் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் திரு.ரவி அவர்களும் உடன் இருந்தனர்.

அப்போது அவர்களிடம் பேசிய MLA அவர்கள், இது உங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அரசு தந்த நல்லாசிரியர் விருது என்றார்.

உங்களிடம் படித்து செல்லும் மாணவர்கள் என்றாவது ஒரு நாள் நேசத்தோடு உங்களை தேடி வந்து நன்றி பாராட்டுவார்கள். அது இதைவிட பெரிய விருதாக இருக்கும் என்றும் கூறினார்.

எனவே உங்களிடம் படிக்கும் பிள்ளைகளை பொது நல அக்கறை உள்ளவர்களாகவும், உயரிய சிந்தனையாளர்களாகவும் உருவாக்குவது அவசியம் என்று கூறினார்.

தங்களை அலுவலகத்திற்கு அழைத்து கவுரவித்தது மகிழ்ச்சி அளித்தது என்று நல்லாசிரியர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

வருகை தந்த அனைவருக்கும் புதிய கல்வி கொள்கையின் பல ஆபத்தான அம்சங்களை விளக்கும் துண்டறிக்கைகளும் வழங்கப்பட்டது.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.