ஈரோட்டில் கொரோனா தொற்று காரணமாக மரணித்தவரின் உடலை நல்லடக்கம் செய்த மஜகவினர்!!


ஈரோடு:செப்.09.,

ஈரோடு மாநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் (பெண்) வயது 58, வீரப்பன்சத்திரம் இறந்ததாகவும், அவரை தாங்கள் கண்ணியமாக அடக்கம் செய்ய உதவ வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளுக்கு இறந்தவரின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதை தொடர்ந்து மஜக ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஷபீக், அவர்கள் தலைமையில் இறந்தவர் உடலை உலக சுகாதார நிறுவனம் மற்றும் ICMR வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி இறந்தவரை கண்ணியமான முறையில் அடக்கம் செய்தனர்.

ஈரோட்டில் கொரோனா தொற்றினால் இறந்தவரின் உடலை கண்ணியமான முறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தன்னார்வலர்கள் அடக்கம் செய்த இந்த உதவிக்கு உயிரிழந்தவரின் குடும்பத்தினர் நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ஈரோடு_கிழக்கு_மாவட்டம்
09.09.2020