அறந்தாங்கி.மே.02., மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைப்பட்டிணம் பகுதியில் பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சியில் இருந்து விலகி மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு பதிலளித்த மஜக பொதுச்செயலாளர் தமிழகத்தில் மீனவர்கள் மற்றும் கடலோர பகுதிகளில் வாழும் மக்களை முழுதுமாக அழித்துவிட்டு அதன் மூலம் கொண்டுவரப்படும் #சாகர்_மாலா திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒத்த கருத்துடன் செயல்பட வேண்டும் என்றும், #காவிரி_மேலாண்மை_வாரியம் தொடர்பான தீர்ப்பில் உள்ள #ஸ்கீம் என்ற வார்த்தைக்கு இன்னும் அர்த்தங்கள் கண்டுபிடிக்கபடவில்லை என்றும் பதிலளித்தார்கள். இதில் மாநில துணைபொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன், மாவட்ட செயலாளர் இ.முபாரக் அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாவட்ட துணைச்செயலாளர் செய்யது அபுதாகிர் மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி. #MJK_IT_WING #மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம். 02.05.2018
நாகப்பட்டிணம்
விவசாயிகளின் வாகன பேரணி நிறைவு..! மஜக சார்பில் உற்சாக வரவேற்பு..!!
திருவாரூர்.மே.01., காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை பின்பற்றி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி #காவிரி_மேலாண்மை_வாரியம் உடன் அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தி #தமிழக_அனைத்து_விவசாயிகள்_சங்கங்களின்_ஒருங்கினைப்பு_குழு தலைவர் தோழர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் தலைமையில் கடந்த 25/4/2018 அன்று வேதாரண்யத்தில் இருசக்கர வாகன பேரணியை #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ அவர்கள் தொடங்கி வைத்தார். இப்பேரணி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சுமார் 2,500 கிலோ மீட்டர் பரப்புரை பயணம் செய்து இறுதியாக 29/04/2018 அன்று நாகை வழியாக திருவாரூர் வந்தடைந்தது. முன்னதாக நாகையில் சட்டமன்ற அலுவலக அருகில் MLA அவர்களின் சார்பில் நாகை தெற்கு மாவட்ட மஜக பொருளாளர் சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் இரு சக்கர வாகன பேரணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிறைவாக திருவாரூர் வந்தடைந்த இரு சக்கர வாகன பேரணிக்கு மஜகவின் மாநில செயலாளர் #நாச்சிகுளம்_தாஜுதீன் அவர்கள் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடுமையான வெப்பத்தையும் பொருட்படுத்தாது தமிழகம் தழுவிய அளவில் காவிரி மீட்பு பற்றிய பரப்புரை செய்து இரு சக்கர வாகனத்தில் சுற்ற வந்த போராளிகளுக்கு நடைபெற்ற பாராட்டு கூட்டத்திலும் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன்
விவசாயிகளின் வாகனப் பேரணி..! மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார்..!!
நாகை. ஏப்.25., காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி தமிழக காவிரி விவசாய சங்கத்தின் சார்பில் தோழர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் இரு சக்கர வாகன பேரணி வட மாவட்டம் முழுக்க புறப்பட்டுருக்கிறது. இதன் தொடக்க விழா நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நடைபெற்றது. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பச்சை கொடியை அசைத்து இரு சக்கர வாகனப் பேரணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் (திமுக), ஆர்.சந்திரமோகன் (அமமுக), நாச்சிக்குளம் தாஜுத்தின்(மஜக) சங்கர வடிவேலு(காங்கிரஸ்), நாகை முபாரக் (மஜக விவசாயணி) மற்றும் வணிகர் சங்கங்கள், விவசாய சங்கங்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர். வேதை நகர மஜக செயலாளர் ஷேக் அகமதுல்லாஹ், முன்னாள் மாவட்ட து.செயலாளர் ஷேக் மன்சூர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_வேதை_நகரம் 25.04.2018
மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக SDPI ஆர்ப்பாட்டம்..! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு..!!
நாகை. ஏப்.24.,இன்று நாகூரில் மார்க் துறைமுகத்திற்க்கு எதிராக SDPI கட்சி நடத்திய நிலக்கரி தடை கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மஜக சார்பாக நாகூர் நகர செயலாளர் H.ஷேக் இஸ்மாயில் தலைமையில், நகர பொருளார் முஹம்மது இபுராஹிம், முன்னாள் செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, தம்மாம் மண்டலம் முன்னால் துணை செயலாளர் H,ஜாகிர் உசேன், முஹம்மது மஸ்தான், சதாம் உசேன், IKP கலிமுல்லாஹ், செல்லாப்பா, செய்யது இபுராஹிம், நூர்சாதிக், செய்யது மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_நாகை_தெற்கு_மாவட்டம் 24.04.2018
பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்..! தமிமுன் அன்சாரி MLA, தனியரசு MLA, கருணாஸ் MLA வேண்டுகோள்..!!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் எஸ்.கருணாஸ் MLA, ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை..) பாஜக பிரமுகர்களான H.ராஜா அவர்களும், S.V சேகர் அவர்களும் சமீபத்தில் பெண்கள் குறித்து வெளியிட்ட கருத்துகள் நேர்மையான அரசியலுக்கும், நாகரீக பொதுவாழ்வுக்கும் எதிரானதாகும். பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் சமூகமே, நாகரீக சமூகமாகும். பெண்களை தரக்குறைவாக விமர்சிக்கும் நபர்கள் இத்தகைய பட்டியலில் இடம் பெற முடியாது. S.V.சேகர் அவர்கள் வேறு ஒருவருடைய கருத்தை, கவனக்குறைவாக பகிர்ந்ததாக கூறியதை ஏற்காத, பத்திரிக்கையாளர்கள் அவர் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதில் சிலர் கோபத்தில் கல்வீச்சில் ஈடுபட்டது ஏற்புடைய செயல் அல்ல, அதே நேரம் H. ராஜா அவர்களையும், S.Vசேகர் அவர்களையும் கைது செய்ய தயங்கும் காவல்துறை, S.V சேகர் வீட்டின் மீது கல்வீச்சு நடத்திய பத்திரிக்கையாளர்களை மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய துடிப்பதன் பிண்ணனி என்ன? என்பதை அறிய விரும்புகிறோம். டெல்லியிலிருந்து, தமிழகத்தில் செயல்படும் ஊடகளுக்கும், அதன் ஆசிரியர்களுக்கும் திட்டமிட்டு கொடுக்கப்படும் நெருக்கடிகளை தமிழகம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு, இவ்விஷயத்தில்