விவசாயிகளின் வாகன பேரணி நிறைவு..! மஜக சார்பில் உற்சாக வரவேற்பு..!!

திருவாரூர்.மே.01., காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை பின்பற்றி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி #காவிரி_மேலாண்மை_வாரியம் உடன் அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தி #தமிழக_அனைத்து_விவசாயிகள்_சங்கங்களின்_ஒருங்கினைப்பு_குழு தலைவர் தோழர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் தலைமையில் கடந்த 25/4/2018 அன்று வேதாரண்யத்தில் இருசக்கர வாகன பேரணியை #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ அவர்கள் தொடங்கி வைத்தார்.

இப்பேரணி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சுமார் 2,500 கிலோ மீட்டர் பரப்புரை பயணம் செய்து இறுதியாக 29/04/2018 அன்று நாகை வழியாக திருவாரூர் வந்தடைந்தது.

முன்னதாக நாகையில் சட்டமன்ற அலுவலக அருகில் MLA அவர்களின் சார்பில் நாகை தெற்கு மாவட்ட மஜக பொருளாளர் சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் இரு சக்கர வாகன பேரணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிறைவாக திருவாரூர் வந்தடைந்த இரு சக்கர வாகன பேரணிக்கு மஜகவின் மாநில செயலாளர் #நாச்சிகுளம்_தாஜுதீன் அவர்கள் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடுமையான வெப்பத்தையும் பொருட்படுத்தாது தமிழகம் தழுவிய அளவில் காவிரி மீட்பு பற்றிய பரப்புரை செய்து இரு சக்கர வாகனத்தில் சுற்ற வந்த போராளிகளுக்கு நடைபெற்ற பாராட்டு கூட்டத்திலும் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் கலந்துகொண்டு போராளிகளை பாராட்டி வாழ்த்தி பேசினார்.

வாகன பேரணி சென்ற இடங்களில் எல்லாம் மஜகவினர் தங்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்ததாக விவசாயிகள் மகிழ்ச்சி பொங்க கூறினர்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக் அவர்கள் தலைமையில் மாவட்ட வணிகர் அணி துனை செயலாளர் புலிவலம் சேக் அப்துல்லா, நகர செயலாளர் சித்திக், பொதக்குடி ஜமால் உட்பட ஏராளமான மஜகவினர் கலந்து கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_நாகை_திருவாரூர் மாவட்டங்கள்.