விவசாயிகளின் வாகனப் பேரணி..! மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார்..!!

நாகை. ஏப்.25., காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி தமிழக காவிரி விவசாய சங்கத்தின் சார்பில் தோழர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் இரு சக்கர வாகன பேரணி வட மாவட்டம் முழுக்க புறப்பட்டுருக்கிறது.

இதன் தொடக்க விழா நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நடைபெற்றது.

மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பச்சை கொடியை அசைத்து இரு சக்கர வாகனப் பேரணியை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் (திமுக), ஆர்.சந்திரமோகன் (அமமுக), நாச்சிக்குளம் தாஜுத்தின்(மஜக) சங்கர வடிவேலு(காங்கிரஸ்), நாகை முபாரக் (மஜக விவசாயணி) மற்றும் வணிகர் சங்கங்கள், விவசாய சங்கங்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

வேதை நகர மஜக செயலாளர் ஷேக் அகமதுல்லாஹ், முன்னாள் மாவட்ட து.செயலாளர் ஷேக் மன்சூர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_வேதை_நகரம்
25.04.2018