ஜன.29., திண்டுக்கல் மாவட்டம் புதுஆயக்குடியில் சமூக நீதிக்காவலர் அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் KM.ஷெரீப், அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவரது உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு:- https://m.facebook.com/story.php?story_fbid=2244556205644142&id=700424783390633 நான் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றுவதற்கு முன்பாக உரை தயாரிப்பு குறித்து கவனம் செலுத்துவேன் ஆனால் இந்நிகழ்ச்சிக்கு வரும்போது, பணி பளு காரணமாக உரை தயாரிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதை காரில் வரும்போது மஜக நிர்வாகிகளிடம் கூறினேன். நான் அது பற்றி கவலைப்படவில்லை. ஏனெனில், பாபா அவர்கள் நம் உணர்வில் கலந்திருக்கிறார், உள்ளத்தில் பதிந்திருக்கிறார்.அவர் பிறந்த ; அவர் விதைக்கப்பட்ட ஊரில், வரும்போதே ஒரு சிலிர்ப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. 1993ஆம் ஆண்டு அகில இந்திய ஜிஹாத் கமிட்டி சார்பில் மயிலாடுதுறையில் பிரம்மாண்டமான மாநாடு நடந்தது. அதில் கூரை நாடு முதல் மயிலாடுதுறை பூங்கா நகரம் வரை பேரணி நடந்தது. பேரணியை டாக்டர்.ராமதாஸ், டாக்டர்.பழனிபாபா, டாக்டர்.சேப்பன், ஆகியோர் பார்வையிட்டனர். நாங்கள் வாகனங்களில் அணிவகுத்து சென்றோம். அப்போதுதான் பாபாவை முதன் முதலில்
Month:
NTF சார்பில் மண்ணடியில் நடைபெற்ற குடியரசு தினசிறப்பு பொதுக்கூட்டம்..! ஹாரூன்ரசீது கண்டன உரை…!
சென்னை.ஜனவரி.28.., தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பாக சென்னை மண்ணடியில் குடியரசும் குடிமக்களும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் தமுமுக நிறுவனர்களில் ஒருவரான விஞ்ஞானி N.S.அப்துல் ஜலீல் தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டார். மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்கள் பேசுகையில்... முன்னாள் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களின் குடும்பத்தாருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது, அஸ்ஸாமின் முதல்வராக இருந்தவருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது அப்படியானால் இந்தியர் அல்லாதவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக எப்படி இருந்தார், அதேபோல் கார்கில் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர் சனாவுல்லா விற்கு குடியுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் இந்தியர் அல்லாதவர் கார்கில் போருக்கு தலைமை தாங்கினாரா, என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும், இக்கூட்டத்தில் மஜக மாநில துணை பொதுச் செயலாளர்கள் N.A.தைமிய்யா, மண்டலம்.ஜெய்னுல் ஆபீதின் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர். இப்பொதுக்கூட்டத்தில் NTF நிறுவன தலைவர் பி.ஜைனுல் ஆபீதீன், பொதுச் செயலாளர் A.S.அலாவுதீன் ஆகியோரும் உரை நிகழ்த்தினர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை 26-01-2020
உள்நாட்டு அமைதியின் மூலமே வல்லரசு கனவு சாத்தியமாகும்! முதமிமுன் அன்சாரி MLA பேச்சு!
சென்னை மேடவாக்கத்தில் அமைந்திருக்கும் காயிதே மில்லத் கல்லூரியில் குடியரசு தின விழா வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. காயிதே மில்லத் அவர்களின் பேரனும், கல்லூரியின் தாளாளருமான தாவூத் மியாகான் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, சாரணர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றினார். அவரது உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு :- https://m.facebook.com/story.php?story_fbid=2240614932704936&id=700424783390633 இன்று இந்தியாவின் 71 வது குடியரசு தின விழாவை நாம் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம். 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதே நமது நாட்டின் சிறப்பாகும். பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், பண்பாடுகள் இவற்றின் கதம்பமாக நம்நாடு இருக்கிறது. வேறுபட்ட நிலவியல் அமைப்புகளையும் கொண்ட நாடு இதுதான். அதனால் தான் இந்தியாவை துணைக் கண்டம் என்றும் நாடுகளின் ஒன்றியம் என்றும் கூறி சிறப்பிக்கிறார்கள். இதை சிதைக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். மாநிலங்களின் உரிமைகளை, சமூகங்களின் உரிமைகளை பறிக்க முயற்சிக்கிறார்கள். கல்வியை சாமான்யர்களுக்கு கடினமாக்கி அவர்களின் முன்னேற்றத்தை தடுத்து ஒரு கட்டத்தில் இடஒதுக்கீட்டை நீர்த்து போகச் செய்ய துடிக்கிறார்கள். சமூகநீதியை, மதச்சார்பின்மையை மக்கள் உரிமைகளை அழிக்க துடிக்கிறார்கள். எல்லாவற்றையும் ஒற்றை கலாச்சாரமாக்க துடிப்பது இந்தியாவின்
தோப்புத்துறையில் சட்டப்பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றல்!
ஜன.26, 71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம், தோப்புத்துறை ஆறுமுகச்சந்தியில் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மருதநாயக ஆட்டோ ஓட்டுநர் சங்கம் இணைந்து இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, மஜக மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அகமதுல்லாஹ் அவர்கள் சட்டப் பாதுகாப்பு உறுதி மொழியை வாசிக்க கலந்துக் கொண்ட அனைவரும் திரும்ப கூறி உறுதி ஏற்றனர். இதில், எம்எஸ்எஃப் தலைவர் முகமது இம்தியாஸ் வரவேற்புரையாற்றிட அப்துல் கபூர் அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்தார். இறுதியில் எம்எஸ்எஃப் செயலாளர் அகமது ரய்யான் நன்றி கூறிட கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் அ.ஷேக்மன்சூர், நகர துணை செயலாளர் முருகானந்தம், ஷேக் அமானுல்லாஹ் உட்பட திரளான மஜகவினரும், பிரமுகர்களும் கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம்.
ஆக்கூர்,மடப்புரம் ஊராட்சிகளின் கிராமசபாவில் மஜக சார்பாக, குடியுரிமைசட்டத்திற்கெதிராக மனு!
ஜன.26, 71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று ஆக்கூர் மற்றும் மடப்புரம் ஊராட்சிகளில் நடைப்பெற்ற கிராம சபா கூட்டத்தில் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் மு.ஷாஜஹான் தலைமையில் மஜகவினர் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவில்.. தேசத்தின் ஒருமைப்பாட்டை குலைக்கும் CAA சட்டத்தை கைவிட வேண்டும். மக்களிடையே குழப்பத்தையும், அச்சத்தையும் உருவாக்கும் NRC மற்றும் NPR பதிவுகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், 5 மற்றும் 8 வகுப்பிற்கான பொதுத் தேர்வு மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மக்களின் கருத்தை கேட்காமலே நடைமுறை படுத்தும் வகையில் திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும் தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து, ஆக்கூர் பேருந்து நிலையம் அருகில் CPI(M) தரங்கபாடி வட்டக் குழு சார்பில் இந்திய மக்களை பிளவுப்படுத்தும் CAA சட்டத்தை வாபஸ் பெற கோரி குடியரசு தினத்தை முன்னிட்டு உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்விலும், ஆக்கூர் மு.ஷாஜஹான் தலைமையில் மஜகவினர் திரளாகப் பங்கேற்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைவடக்குமாவட்டம்.