தோப்புத்துறையில் சட்டப்பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றல்!

ஜன.26,

71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம், தோப்புத்துறை ஆறுமுகச்சந்தியில் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மருதநாயக ஆட்டோ ஓட்டுநர் சங்கம் இணைந்து இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து, மஜக மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அகமதுல்லாஹ் அவர்கள் சட்டப் பாதுகாப்பு உறுதி மொழியை வாசிக்க கலந்துக் கொண்ட அனைவரும் திரும்ப கூறி உறுதி ஏற்றனர்.

இதில், எம்எஸ்எஃப் தலைவர் முகமது இம்தியாஸ் வரவேற்புரையாற்றிட அப்துல் கபூர் அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்தார். இறுதியில் எம்எஸ்எஃப் செயலாளர் அகமது ரய்யான் நன்றி கூறிட கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் அ.ஷேக்மன்சூர், நகர துணை செயலாளர் முருகானந்தம், ஷேக் அமானுல்லாஹ் உட்பட திரளான மஜகவினரும், பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகைதெற்குமாவட்டம்.