செப்டம்பர்.05., வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் 04.09.2021 அன்று பங்கேற்றார். பள்ளிக் கொண்டாவில் தொண்டர்களின் முழக்கங்களுக்கிடையே கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அங்கு ஜமாத்தினரின் அழைப்பை ஏற்று மஸ்ஜிதுக்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடினார். அவர்கள் கொடுத்த கோரிக்கைகளை தொகுதி MLA நந்தக்குமாரின் கவனத்திற்கும், வக்பு தொடர்பான விஷயங்களை வக்பு வாரிய சேர்மன் அப்துல் ரஹ்மானின் கவனத்திற்கும் கொண்டு செல்வதாக கூறினார். பிறகு மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அவைத் தலைவர் நாசர் உமரீ அவர்களும் பங்கேற்றார். புதிய கிளைகளை கட்டமைத்தல், வேலூர் மாநகரில் முழு நேர ஊழியர்களை உருவாக்குதல், விரைவில் மக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்குதல் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது. பிறகு அங்கு வருகை தந்த குடியாத்தம் நகர நிர்வாகிகளை சந்தித்து பணிகள் குறித்து கேட்டறிந்தார். அவர்களின் பணிகள் தொடர்பான ஆவணங்களை பார்த்து விட்டு, கட்சியின் டாப் 10 கிளைகளில் குடியாத்தம் இருப்பதாக கூறி அவர்களை பாராட்டினார். பிறகு அவைத் தலைவர் நாசர் உமரீ அவர்களின் வீட்டுக்கும், சமூக ஊழியர் வேலூர் அவுலியா அவர்களின் வீட்டுக்கும் சென்று நலம்
Month:
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!
மனிதநேய ஜனநாயக கட்சியின், திருச்சி மாவட்ட நிர்வாகிகளாக, மஜக மாவட்ட துணைச்செயலாளராக, K.அன்வர் பாட்ஷா த/பெ; M.கமாலுதீன் D31,4-வது தெரு, துரைசாமி புரம், திருச்சி-620001 மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளராக, ஷேக் இப்ராஹிம் த/பெ; காதர் ஒலி துரைசாமி புரம், திருச்சி ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 05.09.2021
போலிஸ் அதிகாரி சபியாவுக்கு நீதி வேண்டும்.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை!
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 21 வயதே ஆன பெண் காவல்துறை அதிகாரியான #சபியா அவர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர் பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே துடிப்புடன், நேர்மையாக பணியாற்றினார் என்றும், ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக இயங்கினார் என்றும் பலரும் அவரை பாராட்டியுள்ளனர். இந்திலையில் அவர் மர்மமான முறையில் கடத்தப்பட்டு வெட்டுக் காயங்களுடன், மார்பகங்கள் அறுக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்திய தலைநகரில் ஒரு #பெண்_போலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்டுள்ள கொடுரத்தை நினைத்தாலே ஈரல் குலை நடுங்குகிறது. ஆனால் இந்த அராஜக நிகழ்வு முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, சாதரணமான ஒரு நிகழ்வாக கடந்து செல்வது போல இருப்பது வேதனையளிக்கிறது. ஒரு பெண் போலிஸ் அதிகாரிக்கே இந்த நிலை எனில், சாதாரண பெண்களின் பாதுகாப்பு இனி என்னவாக இருக்கும் ?என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே சபியாவுக்கு நீதி கேட்டு ஜனநாயக குரல்கள் உரத்து முழங்க வேண்டும். அரசியலாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் முன்களத்தில் நின்று நீதிக்காக குரல் எழுப்ப வேண்டும். பொதுமக்கள் சமூக வலைதளங்கள் வழியாக ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். சபியாவை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்
மஜக மயிலாடுதுறை மாவட்ட ஆலோசனைக்கூட்டம்! மாநில துணைச்செயலாளர் நாகை முபாரக் பங்கேற்பு!!
செப்.04,. மனிதநேய ஜனநாயக கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட ஆலோசனை கூட்டம் (MJVS) மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க மாநில துணை செயலாளர் N.M.மாலிக் தலைமையில் நீடூரில் நடைப்பெற்றது. மஜக மாநில துணை செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான நாகை முபாரக் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கட்சி வளர்ச்சி பணிகள், கிளை கட்டமைப்பு மற்றும் தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்து பேசினார். கூட்டத்தின் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன... 1. சபியாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். தலைநகர் டெல்லியில் கடந்த வாரம் சபியா சைஃபி என்ற பெண் காவல் அதிகாரி நான்கு நபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதுடன் 50 இடங்களில் வெட்டப்பட்டும் மார்பகங்களை அறுத்தும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொடூரச் சம்பவம் நடைபெற்று ஒரு வாரகாலமாகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படாதது கண்டனத்திற்குரியது. டெல்லியின் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒன்றிய அரசு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. 2. அண்ணா பிறந்த நாளான செப்-15 முன்னிட்டு 10 ஆண்டுக்கு மேல் உள்ள ஆயுள் சிறைவாசிகளை ஜாதி, மத, வழக்கு பேதமின்றி முன்விடுதலை செய்ய வேண்டும் எனவும் தீர்மானம்
அலெகிரியா ஹாலிடேஸ் நிறுவனத்தின் புதிய ஆம்னி பேருந்து சேவை தொடக்க விழா.! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்பு.!!
சென்னை.செப்.04., தமிழகத்தில் பல்வேறு சேவைகளை வழங்கி வரும் அலெகிரிய ஹாலிடேஸ் நிறுவனம் புதிதாக போக்குவரத்து சேவையை தொடங்கியது, புதிய ஆம்னி பேருந்து சேவையின் தொடக்க விழா சென்னை கோடம்பாக்கத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. சென்னை - இளையான்குடி - கீழக்கரை வழித்தடத்தில் இயங்கும் புதிய பேருந்து சேவையை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் திரைப்பட நட்சத்திரங்கள் கானா உலகநாதன், வையாபுரி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #சென்னை 04.09.2021