வேலூர் மாவட்ட மஜக நிகழ்ச்சிகள்! பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

செப்டம்பர்.05., வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் 04.09.2021 அன்று பங்கேற்றார்.

பள்ளிக் கொண்டாவில் தொண்டர்களின் முழக்கங்களுக்கிடையே கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

அங்கு ஜமாத்தினரின் அழைப்பை ஏற்று மஸ்ஜிதுக்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடினார்.

அவர்கள் கொடுத்த கோரிக்கைகளை தொகுதி MLA நந்தக்குமாரின் கவனத்திற்கும், வக்பு தொடர்பான விஷயங்களை வக்பு வாரிய சேர்மன் அப்துல் ரஹ்மானின் கவனத்திற்கும் கொண்டு செல்வதாக கூறினார்.

பிறகு மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அவைத் தலைவர் நாசர் உமரீ அவர்களும் பங்கேற்றார்.

புதிய கிளைகளை கட்டமைத்தல், வேலூர் மாநகரில் முழு நேர ஊழியர்களை உருவாக்குதல், விரைவில் மக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்குதல் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது.

பிறகு அங்கு வருகை தந்த குடியாத்தம் நகர நிர்வாகிகளை சந்தித்து பணிகள் குறித்து கேட்டறிந்தார். அவர்களின் பணிகள் தொடர்பான ஆவணங்களை பார்த்து விட்டு, கட்சியின் டாப் 10 கிளைகளில் குடியாத்தம் இருப்பதாக கூறி அவர்களை பாராட்டினார்.

பிறகு அவைத் தலைவர் நாசர் உமரீ அவர்களின் வீட்டுக்கும், சமூக ஊழியர் வேலூர் அவுலியா அவர்களின் வீட்டுக்கும் சென்று நலம் விசாரித்தார்.

மாவட்ட செயலாளர் யாஸீன் அவர்களின் மகள் திருமணத்தில் பங்கேற்க இயலாததால், அவர் வீட்டுக்கும் சென்று மணமக்களை வாழ்த்தினார்.

மேலும் அவரை வேலூர் நகரின் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் நேரில் வந்து சந்தித்து சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர். மஜகவின் அயராத பணிகளுக்கு வாழ்த்துக்களையும் கூறினார்.

இந்நிகழ்வுகளில் மாநில துணைச் செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான அப்சர் சையத், மாநில இளைஞர் அணி செயலாளர் அசாருதீன், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் அகமது, மாவட்ட செயலாளர் யாஸீன், மாவட்ட துணைச்செயலாளர்கள் ஜாஹீர் உசேன், சையத் உசேன், மாவட்ட MJVS, பட்டேல் ஷமில், இளைஞரணி செயலாளர் அமீன், குடியாத்தம் நகர செயலாளர் அனீஸ், பள்ளிக்கொண்டா நகர செயலாளர் அஜீஸ், பொருளாளர் சத்தார், நகர துணைச்செயலாளர் கௌஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மாவட்டம்
04.09.2021