இறைச்சிக்காக மாடுகளை வெட்டக்கூடாது என்கிற மத்திய அரசின் தடை உத்தரவையடுத்து நாடெங்கும் பலதரப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாட்டுக்கறி உணவை சென்னை IIT வளாகத்திலுள்ள உணவகத்தில் சாப்பிட்டதற்காக சென்னை ஐஐடி மாணவர் சூரஜை தாக்கியது பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் அமைப்பான ஏபிவிபியைச் சேர்ந்த மனீஷ் குமார் சிங் உட்பட குண்டர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதை மாணவர் இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. தாக்குதலில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி குண்டர்களை உடனடியாக கைது செய்யுமாறு தமிழக அசை மாணவர் இந்தியா வலியுறுத்துகிறது. ABVP குண்டர்களை கைது செய்வதோடு மட்டமல்லாமல் அவர்களின் தீவிரவாத நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். உணவு பழக்கத்தின் மூலம் மக்களிடையே பிளவு அரசியலை ஏற்படுத்தும் சங்பரிவார பிஜேபி யின் பாசிச நடவடிக்கையை முறியடிக்க மாணவர்களை ஒன்றிணைத்து மாணவர் இந்தியா போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், முஹம்மது அஸாருதீன், மாநிலச் செயலாளர், மாணவர் இந்தியா சென்னை 31.05.2017
தமிழகம்
தமிழகம்
கோவை மஜக நிர்வாகிகளுடன் தெற்கு மண்டல மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு!
கோவை.மே.30., மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் சுல்தான் அமீர் அவர்களை மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்து மாட்டிறைச்சி தடையால் தற்போது அவர்கள் சந்தித்து வரும் பல்வேறு நெருக்கடிகள் குறித்து தெரிவித்தனர். பின்னர் 01.06.2017 வியாழன் அன்று மஜக சார்பில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து நடைபெறும் ரயில்நிலைய முற்றுகை போராட்டத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தாங்களும் கலந்துகொள்வதாக தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாநிலசெயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட செயலாளர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் பதுருதீன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல் மற்றும் ஆத்துப்பாலம் அபு ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 30.05.2017
மாட்டிறைச்சி தடை சட்டத்தை கண்டித்து மஜக முற்றுகை போராட்டம்- 300 க்கும் மேற்பட்டோர் கைது…
சென்னை.மே.30., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இறைச்சிக்காக பசு, காளை, எருமை மாடுகளையும், ஒட்டகத்தையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்த மத்திய அரசின் சட்டத்தை திரும்ப பெற கோரி சென்னை மவுண்ட் ரோடு, அண்ணா சாலையிலுள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்த தடையின் மூலம் விவசாயிகள், தலித், சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விரோதமான போக்கை அப்பட்டமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளிப்படுத்தி உள்ளது. மிருகங்கள் வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து மேலும் மாடு மற்றும் ஒட்டகத்தை பலியிடவும் பாஜக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. போராட்டம் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் வே.மதிமாறன், பகுஜன் சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அசாருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட மனிதநேய சொந்தங்கள் கலந்துக்கொண்டு கைதாகினர். தகவல்; தகவல்
திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது..! தமிழக அரசுக்கு மஜக கண்டனம்…!!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச அளவில் பல்வேறு அமைப்புகள் இலங்கை அரசுக் கெதிராக கண்டனக் குரல்கள் எழுப்பி வரும் சூழ்நிலையில் மே-17 இயக்கமும் பல்வேறு இடங்களில் ஈழம் தொடர்பாக நினைவேந்தல் நிகழ்வுகளை ஆண்டு தோறும் நடத்துவது வழக்கம். அந்த அடிப்டையில் கடந்த மே-17 அன்று முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பாக தோழர் திருமுருகன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வை மே-17 இயக்கம் சென்னை மெரினாவில் நடத்தியது. இதே போன்று மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மே-17 இயக்கம் பல்வேறு வடிவங்களில் எதிர்த்து வந்தது. இந்நிலையில் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்திய திருமுருகன், அருண்குமார் , இளமாறன் மற்றும் டைசன் உள்ளிட்ட நான்கு பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சமூக ஆர்வலரும் , மனித உரிமை களத்தில் தொடர்ந்து போராடி வருபவருமான திருமுருகன் உள்ளிட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது சமூக நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் நல்ல திட்டங்களை ஆதரிப்பதும், மக்கள் விரோத திட்டங்களை எதிர்ப்பதும் சமூக
வேலூர் கணியம்பாடி ஒன்றியத்தில் மஜக புதிய கிளைகள் துவக்கம்..!
வேலூர்.மே.26., மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டம் ஆற்காடு தொகுதி கணியம்பாடி ஒன்றியத்தில் 2 புதிய கிளைகள் துவக்கம். மாவட்ட அமைப்புகுழு முஹம்மத் ஜாபர் அவர்கள் முன்னிலையில், பென்னாத்தூர் பேரூராட்ச்சி 3 வது வார்டு சப்தலிபுரம் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். கிளை செயலாளர் : பியாரு கிளை பொருளாளர் : ரசூல் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். வேப்பம்பட்டு ஊராட்சி கிளை கிளை செயலாளர்: அப்சல், கிளை பொருளாளர் : ஷயின்ஷா துணை செயலாளர்கள் : இம்தியாஸ், மதீன், பசல், இளைஞர் அணி செயலாளர் : முன்னா ஆகியோர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மனிதநேயத்துடன் சகோதரர்கள் களப்பணி சிறக்க இறைவனை பிரார்த்திப்போம். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING, வேலூர் கிழக்கு மாவட்டம். 25.05.2017.