சட்டப்பேரவையில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே; உலக அளவிலே அடுத்த நூறு ஆண்டுகளிலே அழியும் மொழியின் வரிசையிலே தமிழ் எட்டாவது இடத்தில் இருப்பதாக UNESCO அமைப்பு எச்சரித்திருக்கின்றது. இந்த நிலையிலே, சென்னையில் இயங்கி வரும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை, திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்தி, சமஸ்கிருதம் ஆகியவை தவிர்த்து, இதர மொழி ஆய்வு மையங்களை அந்தந்த மாநில மத்திய பல்கலைக்கழகங்களின் கீழ் கொண்டு வர NITI Aayog பரிந்துரைத்திருக்கிறது. சங்க இலக்கியங்கள் பற்றிய பல்வேறு ஆராய்ச்சிப் பணிகள் இந்த நிர்வாகத்தின் நிதியோடுதான் நடைப்பெற்று வருகின்றன. பழந்தமிழ் நூல்களை, ஓலைச் சுவடிகளுடன் ஒப்பிட்டு, ஆய்வுப் பதிப்புகளை வெளியிடும் திட்டமும் இதன் மூலமே நடைபெற்று வருகிறது. சமஸ்கிருதத்திற்கு உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் இருக்கைகளை தொடங்க உதவும் மத்திய அரசு, தமிழை பாதுகாக்கும் வகையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை தொடர்ந்து தன்னாட்சி அமைப்பாக இயங்கச் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு தலையிட்டு, தமிழை பாதுகாக்க
தமிழகம்
தமிழகம்
மஜக இராமநாதபுரம் மாவட்ட நிர்வாக கூட்டம்! மாநில பொருளாளர் பங்கேற்பு!
இராமநாதபுரம்.ஜூலை.18., மனிதநேய ஜனநாயக கட்சியின் இராமநாதபுரம் மாவட்டம் ஆலோசனை கூட்டம் மற்றும் பரமக்குடி நகரம் எமனேஸ்வரம் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (17.07.2017) நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட செயலாளர் முஹம்மது இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி பரமக்குடி நகர துணைச் செயலாளர் ஜாபர் அலி அவர்களின் திருமணத்திற்கு பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது, தலைமை ஒருங்கினைப்பாளர். மௌளா M.நாசர், இணைப் பொதுச் செயலாளர் மைதின் உலவி ஆகியோரை நேரில் சென்று அழைப்பிதல் கொடுப்பது என்றும், 2. எதிர்வரும் 06/08/17 அன்று பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் அருகில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடத்துவது என்றும், 3. 06/08/17 அன்று மாலை மாநில நிர்வாகிகளை அழைத்து கருத்தரங்கம் நடத்துவது என்றும், 4. மாவட்டம் முழுவதும் புதிய உறுப்பினர்களை சேர்த்து புதிய கிளைகளை உருவாக்குவது... ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், அப்துல் கஃபூர், பைசல்ரசீத், அப்துல்நசீர், பரமகுடிநகர செயலாளர். ஷாகுல், துணை செயலாளர் ஜாஃபர்அலி, கலிஃபதுல்லாஹ், ஷமிர், ரஹ்மான், மாணவர் இந்தியா செயலாளர்
தமிழக முதல்வருடன் M.தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் சந்திப்பு!
#தமிழக_முதல்வருடன் M.தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் சந்திப்பு! (நீட்தேர்வு, கதிராமங்கலம், கம்பம் வழக்கு, சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக) இன்று (18.7.17) மதியம் 3 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்களை மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் முதல்வர் அறையில் சந்தித்தனர். NEET தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு எடுக்க வேண்டிய முன் முயற்சிகள் குறித்து மூவரும் கருத்து தெரிவித்து, அது தொடர்பாக மாணவர்களை சந்தித்து பேச நேரம் ஒதுக்க வேண்டும் எனக் கேட்டனர். உடனே அதற்கு நாளையே சந்திக்கலாம் என ஒப்புக் கொண்டார். பிறகு MGR நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் விடுதலை செய்வது குறித்து மீண்டும் நினைவூட்டினர். அது குறித்து உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என முதல்வர் பதிலளித்து நம்பிக்கையூட்டினார். கதிராமங்கலத்தில் போராடி வரும் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குள் வாபஸ் பெற வேண்டும் என்றதற்கு, அங்கு நிலைமை சுமூகமாகி வருகிறது. நிலைமை சீரானதும் வழக்குகள் வாபஸ் பெற நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கூறினார். பிறகு, தேனி மாவட்டம் கம்பத்தில் இந்து
ரத்தத்தால் கையெழுத்து! மஜக பொதுச்செயலாளருடன் மாணவர்கள் சந்திப்பு!
சென்னை.ஜூலை.18., 'NEET' தேர்வில் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டது தொடர்பாக தமிழக சட்டசபையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, இதுவரை 3 முறை பேசியுள்ளார். ஒரு கவன ஈர்ப்பு தீர்மானமும் கொடுத்துள்ளார். இந்நிலையில் தோழர்.பிரின்ஸ் கஜேந்திரன் தலைமையில் பல்வேறு மாணவர் இயக்க பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து சட்டமன்ற விடுதிக்கு வந்து பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்தனர். அப்போது தனியரசு MLA வும் இருந்தார். நீட் தேர்வுக்கு எதிராக மாணவ, மாணவிகள் தங்கள் இரத்தத்தால் வரைந்த கண்டன சுவரொட்டியை அவரிடம் காட்டினர். 'நீட்' தேர்வில் ஏற்படும் பாதிப்புகளை விவரித்தனர். முதல்வர் அவர்களை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர். மாணங்களின் உணர்வுகளுக்கு மஜக துணை நிற்கும் என பொதுச்செயலாளர் கூறினார். அவர்களுடன் மாணவர் இந்தியாவின் பிரதிநிதிகளும் வருகை தந்தனர். தகவல்; மஜக தகவல் தொழில் நுட்ப அணி, #MJK_IT_WING சென்னை. 18.07.17
மஜக பொதுச் செயலாளர் வாக்களித்தார்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இன்று குடியரசு தலைவருக்கான தேர்தலில் வாக்களித்தார். இன்று காலை இளைஞர் அணி செயலாளர் ஷமீம் அகமது, விவசாய அணி செயலாளர் நாகை. முபாரக் ஆகியோருடன் சட்டமன்றம் சென்றார். வழக்கமான வெள்ளை ஆடைகளுடன் செல்லாமல், கலர் ஆடைகளுடன் வந்ததும், அமைச்சர்களும், MLA க்களும், எதிர்கட்சி உறுப்பினர்களும் அவரை பார்த்து 'தமாஷ்' செய்தனர். ராதாபுரம் அதிமுக MLA இன்பதுரை, எங்கப்பா தமிமுன் அன்சாரி? என்று சொல்லிவிட்டு, மாணவர்கள் வாக்களிக்கக்கூடாது? இது உங்களுக்கு தெரியுமா? என கிண்டலடித்தார். பிறகு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஏஜெண்ட் விஜயதரணி MLA, தமிமுன் அன்சாரியை பார்த்து 'நான் யாரென்று குழம்பிட்டேன்' என்று கூறிவிட்டு, வாக்கு சாவடிக்கு அழைத்துப் போனார். அங்கு அதிமுக மற்றும் காங்கிரஸ் MLA க்கள் அவரை வரவேற்று ஜாலியாக பேசினர். இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தானே இந்த முடிவு? மற்றப்படி எங்களை விட்டும் போக மாட்டீர்களே என உரிமையுடன் கேட்க, காங்கிரஸ் MLA க்கள் அதற்கு ஜாலியாக பதிலளித்தனர். பிறகு வாக்களிக்க அவர் உள்ளே வந்ததும், புகைப்பட கலைஞர்கள் படத்திற்கு 'போஸ்' கொடுக்க கூற கேமராக்கள் மின்னின. பிறகு வெளியே வந்து பத்திரிக்கையாளர்களை