ரத்தத்தால் கையெழுத்து! மஜக பொதுச்செயலாளருடன் மாணவர்கள் சந்திப்பு!

image

image

சென்னை.ஜூலை.18., ‘NEET’  தேர்வில் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டது தொடர்பாக தமிழக சட்டசபையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, இதுவரை 3 முறை பேசியுள்ளார்.

ஒரு கவன ஈர்ப்பு தீர்மானமும் கொடுத்துள்ளார். இந்நிலையில்
தோழர்.பிரின்ஸ் கஜேந்திரன் தலைமையில் பல்வேறு மாணவர் இயக்க பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து சட்டமன்ற விடுதிக்கு வந்து பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்தனர். அப்போது தனியரசு MLA வும் இருந்தார்.

நீட் தேர்வுக்கு எதிராக மாணவ, மாணவிகள் தங்கள் இரத்தத்தால் வரைந்த கண்டன சுவரொட்டியை அவரிடம் காட்டினர்.  ‘நீட்’ தேர்வில் ஏற்படும் பாதிப்புகளை விவரித்தனர். முதல்வர் அவர்களை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர்.

மாணங்களின் உணர்வுகளுக்கு மஜக துணை நிற்கும் என பொதுச்செயலாளர் கூறினார்.

அவர்களுடன் மாணவர் இந்தியாவின் பிரதிநிதிகளும் வருகை தந்தனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில் நுட்ப அணி,
#MJK_IT_WING
சென்னை.
18.07.17