You are here

நாகர்கோவில் மாநகராட்சியின் 39வது மற்றும் 42வது வார்டு… மஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்..!!

நாகர்கோவில்.பிப்.04., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சியின் 39-வது வார்டில் M. பாத்திமா பீவி அவர்களும், 42-வது வார்டில் M.முஜீப் ரகுமான் அவர்களும் போட்டியிடுகின்றனர்.

இன்று அவர்கள் (04.02.2022) தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தனர்.

இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், மாவட்ட துணை செயலாளர் அமீர்கான், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அஸ்ரப் அலி, மாநகர செயலாளர் மாஹீன் இப்ராஹிம், மாநகரா துணை செயலாளர் செய்யது முஹம்மது, பைசல் இம்ரான், வேல்முருகன் மற்றும் மஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கன்னியாகுமரி_மாவட்டம
04.02.2022

Top