You are here

புதுக்கோட்டை நகராட்சி 33வது மற்றும் 41வது வார்டு… மஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்..!!

புதுக்கோட்டை.பிப்.04., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் புதுக்கோட்டை நகராட்சியின் 33-வது வார்டில் மருத்துவ அணி மாவட்ட செயலாளர் v.சீனிவாசன் அவர்கள் மனைவி விஜயராணி MA.BEd.Mphil அவர்களும், 41-வது வார்டில் மாவட்ட பொருளாளர் M.ரஹும் தாலிஃப் அவர்களும் போட்டியிடுகின்றனர்.

இன்று அவர்கள் (04.02.2022) தனது வேட்புமனுவை மாநில துணைச்செயலாளர் துரை முகமது அவர்கள் தலைமையில் சென்று தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தனர்.

இதில் மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான் மற்றும் மாவட்ட துணை செயலாளர் காதர் மைதீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம்
04.02.2022

Top