திருப்பூர்.செப்.12., மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைவதற்காக இன்று மதியம் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்ட இளைஞர்கள், இன்று இரவு 8மணியளவில் மாவட்ட அலுவலகம் வந்தனர். மஜக பொதுச் செயலாளரரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி MLA அவர்களின் செயல்பாடுகளை ஊடகங்களின் வாயிலாக பார்த்து வருகிறோம், அவரது தெளிவான சிந்தனைகளையும் அனைவரோடும் எளிமையாக நெருங்கி பழகும் பண்பையும், குறிப்பிட்ட சாரார் என்றில்லாமல் சட்டசபையில் சமூக நீதி சமூக நல்லிணக்கம் ஜனநாயக அரசியல்.! என சட்டமன்ற சிறப்பான செயல்பாடுகளை பகுப்பாய்வு செய்து, வளர்ந்து வரும் எளிமையான இளம் தலைவராக வலம் வரும்... எம்.தமிமுன் அன்சாரி அவர்களின் தலைமையேற்று ... மாவட்ட செயலாளர் I.ஹைதர் அலி அவர்கள் முன்னிலையில் உறுப்பினர் படிவத்தை நிரப்பி, தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக்கொண்டனர். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கரட்டாங்காடு பகுதி இளைஞர்கள்.! சமூக பணியில் இணைத்துக்கொண்ட இளைஞர்கள் பெயர்கள் வருமாறு.. J.செளகத் அலி அவர்கள் J.ஈஸ்வரன் அவர்கள். A.சுகனேஸ் அவர்கள் T.பிரான்சிஸ் அவர்கள் A.மன்சூர் அலிகான் அவர்கள் ஆகியோர். இந்த நிகழ்வின் போது மாவட்ட பொருளாளர் முஷ்தாக் அஹமது, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் காதர் கான், திருப்பூர் மீரான், பெரிய தோட்டம் நிர்வாகி அபுதாஹீர் ஆகியோர் உடனிருந்தனர். தகவல். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பூர்_மாவட்டம் 12_09_2017
தமிழகம்
தமிழகம்
மஜக கோவை மாவட்ட ஆலோசனைக் கூட்டம்..!
கோவை.செப்.12., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், ABT.பாருக், இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், தொழிற் சங்க மாவட்ட துணை செயலாளர் ABS.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் மற்றும் பகுதி நிர்வாகிகள் காஜா, முத்தலி, ஜாபர், அபு, இம்தியாஸ், அக்பர், ஜமால், ஹாருண் ரஷீது, அஜீஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1) மஜக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரைவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது., 2) விரைவில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது., தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 11.09.17
தமிழக மாணவ, மாணவிகளிடையே சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயல்..!! மாணவர் இந்தியா கண்டனம்..!!
(மாணவர் இந்தியா மாநில செயலாளர் A.முஹம்மது அஸாருதீன் வெளியிடும் கண்டன அறிக்கை...) தமிழகத்தில் மாணவ மாணவிகளின் சமூக அக்கறை, நல்லிணக்கம், சேவை மனப்பான்மையை ஊக்குவிக்கும் இயக்கமாக சாரணர்-சாரணிய இயக்கம் செயல்பட்டு வருகிறது.அப்படிப்பட்ட இயக்கத்திற்கு இதுநாள் வரை தகுதி படைத்த நபரே தலைவராக இருந்துள்ளனர்.இதற்கு மாறாக தற்போது தமிழக சாரண-சாரணிய இயக்கத்தின் தலைவராக பா.ஜ.க.வைச் சேர்ந்த எச்.ராஜா வை நியமிக்க தமிழக அரசு முயற்சி செய்வது கண்டனத்திற்குரியது. விதிகளை மாற்றி அரசியல் சார்புடைய ஒருவரை,மத்திய அரசின் வாரிய பதவி வகிப்பவரை தலைவராக நியமிக்க முயற்சி செய்வது தமிழக மாணவ-மாணவிகளிடையே பாசிஸ சிந்தனையை புகுத்தி சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் பா.ஜ.க வின் திட்டத்திற்கு தமிழக அரசு துணை போகக்கூடாது. மேலும் இதுபோன்ற பதவிகளில் தகுதி படைத்த சகிப்புத்தன்மையுடையவரையே தலைவராக நியமிக்க வேண்டும் என்று மாணவர் இந்தியா சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவண், A.முஹம்மது அஸாருதீன், மாநில செயலாளர், மாணவர் இந்தியா. 12.09.17
அரசு ஊழியர்களை தமிழக அரசு அழைத்துப் பேச வேண்டும்..! மஜக வேண்டுகோள்.!!
( மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை செயல்படுத்த வேண்டும், ஒப்பந்த பணி முறையை ஒழித்துவிட்டு நிரந்தர பணிகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டொ-ஜியோ உள்ளிட்ட அரசு ஊழியர் அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தால் அரசு பணிகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அவர்களின் போராட்டத்தை அலட்சியப்படுத்தாமல், அவர்களை அழைத்து தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வேலை நிறுத்தத்தை முறியடிப்பதில் கவனம் செலுத்தாமல், அவர்களோடு சுமூக பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரமுடியும். இதில் தமிழக அரசு கவனம் செலுத்தி அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவன். M. தமிமுன் அன்சாரி MLA, 12.09.17
ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு எதிராக மஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…!!
வேலூர்.செப்.12.,வேலுர் கிழக்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி-யின் (MJK) சார்பில் விக்டோரியா தூண் அருகில் மியான்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மாவட்ட அமைப்புக்குழு தலைவர் S.G.அப்சர் சையத் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்புக்குழு பொருப்பாளர் முஹம்மத் ஜாபர் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட அமைப்புக்குழு பொருப்பாளர்கள் முஹம்மத் வசீம், முஹம்மத் சலீம்,சையத் உசேன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபிக் ரப்பானி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மஜக மாநில பொருளாளர் S.S..ஹாரூன் ரஷீத், அவைத்தலைவர் மவ்லவி S.S. நாசர் உமரி, மாநில செயலாளர் A.சாதிக் பாஷா, மாநில துணை செயலாளர் J.M.வசிம் அக்ரம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். மாவட்ட அமைப்புக்குழு பொருப்பாளர் ஜாகீர் உசேன் நன்றியுரை கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜக மாநில செயற்க்குழு உறுப்பினர் சையத் அபுதாஹிர், காஞ்சி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அன்வர், வேலூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் S.MD.நவாஸ், இன்சாப், மாநில துணை செயலாளர் ஆலியார் அதாவுல்லா, நாம் தமிழர் கட்சி தோழர் வீர.ரகு, குடியாத்தம் நகர செயலாளர் S.அனீஸ், நகர பொருளாளர் V.முபாரக்