செப்டம்பர் 10 முற்றுகை!! திருவாரூர் மாவட்ட ஆயத்த ஆலோசனை கூட்டம்!! மஜக மாநில செயலாளர் நாகை முபாரக் பங்கேற்பு!!

ஜூலை ;26;

எதிர்வரும் செப்டம்பர் 10 அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சென்னையில் 10 ஆண்டுகள் கடந்து சிறையில் வாடும் அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் சாதி,மத பேதமின்றி முன் விடுதலைச் செய்யக் கோரி தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.

அது தொடர்பான ஆயத்த ஆலோசனை கூட்டம் திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையில் மாவட்ட செயலாளர் P.M.A.சீனி ஜெகபர், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் நாகை முபாரக் அவர்கள் கலந்து கொண்டு முற்றுகை போராட்டம் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளர் ஷேக் அப்துல்லா, மாநில செயற்குழு உறுப்பினர் பொதக்குடி ஜெய்னுதீன், மாவட்ட துணைச் செயலாளர் நத்தர் கனி, கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் குத்துபுதீன், மருத்துவ சேவை அணி மாவட்டச் செயலாளர் சித்திக், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணைச் செயலாளர் ரிஸ்வான் முகமது, IKP மாவட்டச் செயலாளர் அபி, திருவாரூர் ஒன்றியச் செயலாளர் ஜலாலுதீன், தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் முகமது பைசல், மாணவர் இந்தியா மாவட்ட துணைச் செயலாளர் முகமது தாஹிர், பொதக்குடி முஸ்தாக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அத்திக்கடைக் கிளைச் செயலாளர் சையது உமர் சலீம் அவர்களது தலைமையில் கிளைப் பொருளாளர் முகமது ரபீக் மற்றும் கிளை துணைச் செயலாளர்கள், சதாம், நிஜாம், உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருவாரூர்_மாவட்டம்
24.07.2022