செப்10 தலைமை செயலக முற்றுகை! மஜக கோவை மாநகர் மாவட்ட ஆயத்த ஆலோசனை கூட்டம்!

ஜூலை:26.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் செப் 10.அன்று 10 ஆண்டுகளை நிறைவு செய்து ஆயுள் சிறைவாசிகளை சாதி-மத வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வலியுறுத்தி தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

அது தொடர்பான கோவை மாநகர மாவட்ட ஆயத்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்தில் வரவிருக்கும் செப்டம்பர் 10 -ஆம் தேதி நடைபெற இருக்கும் சென்னை தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் குறித்தும், அதற்கான ஆயத்த பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சிங்கை சுலைமான், ஹனிபா, ஜாபர் சாதிக், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அன்சர், மாவட்ட பொருளாளர் பைசல் ரகுமான், துணைச் செயலாளர் சையத், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ஆஷிக், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#ReleaseLongTermPrisoners

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
26.07.2022.