வேலூர்.அக்.10,.மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மேற்கு மாவட்டம் நிர்வாகத்தை சீரமைத்து சில தினங்கள் முன்பு புதிய பொருப்பாளர்கள் நியமனம் செய்து மாவட்ட பொறுப்பு குழு அமைக்கப்பட்டது. பொறுப்புக்குழு உறுப்பினர் ஆம்பூர் M.ஜஹீருஸ் ஜமா தலைமையில் ஆம்பூர் நகர நிர்வாகிகள் நகரம் முழுவதும் கிளைகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சூப்பர் நேஷன் பார்டியை சார்ந்த சகோதரர் நபீஸ் தலைமையில் சில சகோதரர்கள் உறுப்பினர் படிவத்தை நிரப்பி தன்னேழுச்சியாக மஜகவில் உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் SMD.நவாஸ், S.M.,ஷாநவாஸ் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மேற்கு_மாவட்டம்
தமிழகம்
தமிழகம்
கெயில் எரிவாயு குழாய் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது! தமிமுன் அன்சாரி MLA, கருணாஸ் MLA, தனியரசு MLA வேண்டுகோள்!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது.கருணாஸ் MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA வெளியிடும் கூட்டறிக்கை) கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் வழியே 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 20 மீட்டர் அகலத்திற்கு எரிவாயு குழாய் பதிக்க இந்திய எரிவாயு கட்டுப்பாட்டு நிறுவனம் (கெயில்) மத்திய அரசிடம் அனுமதி பெற்றது. விவசாய நிலங்களை பாதிக்கும் இத்திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் சட்டமன்றத்திலேயே அறிவித்தார்கள். தமிழக அரசின் சார்பில் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறு சீராய்வு மனு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இத்திட்டத்தை பசுமை கொழிக்கும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் அமல்படுத்த முனைவது கண்டனத்திற்குரியது. விவசாய நிலங்களை பாழ்படுத்துவதை அனுமதிக்க முடியது. கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரத்திலேயே எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் விளை நிலங்களின் வழியேத்தான் எரிவாயு குழாய்கள் பதிப்போம் என அடம் பிடிப்பதை ஏற்கவே முடியாது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளின் வழியாக மட்டுமே
ஆதிதிராவிட மாணவ-மாணவியர்களின், கல்வி உரிமையை பறிக்க வேண்டாம்! தமிழக அரசுக்கு மாணவர் இந்தியா வேண்டுகோள்!
ஆதிதிராவிட சமுதாயம் மற்றும் பழங்குடியின சமுதாய மாணவர்களின் நலன் கருதி, அவர்கள் திரும்ப செலுத்த அனைத்து கல்வி கட்டணங்களையும் அரசே வழங்கும் என அரசாணை எண் 6 மற்றும் 92 சொல்கிறது. இதனை கலை அறிவியல் கல்லூரிகள் முழுமையாக பின்பற்றவில்லை. ஆனால் பொறியியல் கல்லூரிகள் நடைமுறைப்படுத்தி வந்தன. இது குறித்து நீதியரசர் N.V. பாலசுப்ரமணியம் குழு வடிவமைத்த கட்டணத் தொகை பட்டியலின் மாணவ-மாணவிகளுக்கு கிடைத்ததால் அதில் 42 ஆயிரம் மாணவ-மாணவிகள் பொறியியல் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது. தற்போது நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் ஆதிதிராவிட, பழங்குடியின, மதம் மாறிய கிருஸ்துவ மாணவ, மாணவிகளின் உதவித்தொகையை தமிழக அரசு குறைத்து அரசாணையை வெளியிட்டுருக்கிறது. இதனால், இதுவரை பலனடைந்துள்ள மாணவ, மாணவிகள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். பலரின் படிப்பு பாதியிலேயே நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தமிழக அரசு இந்த அரசாணையை ரத்து செய்து, பழைய நிலை தொடர ஆவணம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவண், #A_முஹம்மது_அஸாருதீன், #மாநில_செயலாளர், #மாணவர்_இந்தியா
PFI மாநாட்டில் மஜக மாநில பொருளாளர் சிறப்புரை..!
சென்னை.அக்.09., பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பாக நேற்று 08.10.2017 மாலை 4.00 மணியளவில் சென்னை, ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெற்ற உரிமை முழக்க மாநாட்டில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது. M.Com அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பாசிசத்திற்கு எதிராக எழுச்சி உரை நிகழ்த்தினார். இதில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித், தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, மாவட்ட துணைச் செயலாளர்கள் பீர் முஹம்மது, அமீர் அப்பாஸ், துறைமுக பகுதி செயலாளர் குப்பை சீனி, துறைமுக பகுதி துணைச் செயலாளர் பஜார் அபூபக்கர், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் துணைச்செயலாளர் M.பக்ருதீன் மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தலைமையகம்_சென்னை 08.10.17
ஹஜ் மானியத்தை ரத்து செய்யக்கூடாது! மஜக வேண்டுகோள்!
(மஜக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) புனித ஹஜ் பயணத்தை மேற்கொண்டு வரும் பயணிகளுக்கான மானியத்தை அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்வது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்திய ஹஜ் கமிட்டி மூலம் ஒரு முறைதான் ஒருவர் ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற சீர்திருத்தங்களை அனைவரும் வரவேற்றார்கள். ஆனால், மானியத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதை ஏற்கவே முடியாது. உச்ச நீதிமன்றம் வழிகாட்டியதன் அடிப்படையில் சிறுபான்மையினர் நல அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் ஆலோசனைகள் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. உச்ச நீதிமன்றத்திடம் ஹஜ் மானியம் குறித்து வரலாற்று பின்னணியுடன் மத்திய அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யாமல், இதற்காக ஒரு பொம்மை குழுவை அமைத்து, அதன் ஆலோசனைகளை அறிவிப்புகளாக வெளியிடுவது ஒரு வகை நாடகமாகும். உச்ச நீதிமன்றம் கூறும் எல்லா விஷயங்கக்ளும் மத்திய அரசு இவ்வாறுதான் பதில் அளிக்கிறதா? காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை ஏற்கமாட்டோம் என அறிவித்த மத்திய அரசு, ஹஜ் மானிய விஷயத்தில் மட்டும் அக்கறை காட்டுவது அதன் கபட முகத்தை காட்டுகிறது. முன்பு கப்பல்