செப் 11., மனிதநேய ஜனநாயக கட்சியின் டெல்டா மண்டல செயற்குழு கூட்டம் இன்று புறநகர் தஞ்சாவூரில், அய்யம்பேட்டை சாலையில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைப்பெற்றது. அப்போது முதல் நிகழ்வாக முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்களுக்கான இரங்கல் தீர்மானத்தை தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர் அவர்கள் முன்மொழிந்தார்கள். அதன் பின் அனைவரும் ஒரு நிமிடம் மெளனமாக எழுந்து நின்று துயரை வெளிப்படுத்தினார்கள். பிறகு பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், துணைப் பொதுச் செயலாளர் மன்னை. செல்லச்சாமி அவர்களும் வசீம் அக்ரம் அவர்களின் பணிகளை பாராட்டி பேசினர். இரங்கல் தீர்மான விபரம் பின்வருமாறு... மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வாசிம் அக்ரம் அவர்கள் நேற்று படுகொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கஞ்சா வினியோகம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் கூலிப்படை மூலம் இப் படுகொலை நடத்தப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. இவ்விஷயத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட காவல் துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும் தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் அவரது குடும்பத்திற்கு 20 லட்சம்
மஜக செயற்குழு
வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்கள் படுகொலை! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கண்டனம்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்கள் இன்று மாலை கொடூரமான முறையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் அப்பகுதியில் வாழும் மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பல சேவைகளை ஆற்றி வந்தவர். அம்மாவட்ட மக்களால் நன்கு அறியப்பட்டவர். மஜக-வின் பல்வேறு அரசியல் பணிகளில் துடிப்போடு பங்கேற்று செயலாற்றியவர். இன்று அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி பெரும் துயரத்தை தருகிறது. காவல்துறை துரிதமாக செயல்பட்டு உண்மை குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், கட்சியினர், அவ்வூர் மக்கள் அனைவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறு உலக வாழ்வு சிறக்க பிரார்த்திக்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 10.09.2021
மஜக கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்!! துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் பங்கேற்பு!!
கோவை:மார்ச்:15., மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர், அவர்கள் பங்கேற்று கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்து நிர்வாகிகள் மத்தியில் விரிவாக உரையாற்றினார், மேலும் சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடங்குவது குறித்து நிர்வாகிகள் மத்தியில் கருத்து பரிமாற்றம் நடத்தப்பட்டது. இதில் கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், முஸ்தபா, அபு, மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பகுதி, நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #TNElection2021 #கோவை_மாநகர்_மாவட்டம் 14.03.2021
பணிகளில் பாராட்டு சான்றிதழ்களை குவித்த மாவட்டங்கள்! மஜக 9 ஆவது தலைமை செயற்குழு துளிகள்!
ஜனவரி 23 அன்று திருநெல்வேலியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் நடைபெற்றது. நெல்லையின் முக்கிய வீதிகளில் மஜக கொடிகள் அணிவகுத்து பறந்துக் கொண்டிருந்தது. எங்கும் சுவரொட்டிகள், பேனர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. காலை 10 மணி முதலே மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் மண்டபத்தில் வரிசையாக நின்று அழைப்பிதழ்களை பதிவு செய்து பேட்ஜ்களை பெற்றுக் கொண்டனர். கோவையில் பிப்ரவரி 29 அன்று மஜக வின் வாழ்வுரிமை மாநாடு நடந்து முடிந்த சில நாட்களில் கொரோனா தொற்று நோய் பரவியதால் ஏறத்தாழ 10 மாதங்கள் மாநில அளவிளான ஒன்று கூடல்கள் இல்லாமல் ஒருவருக்கொருவர் சந்திக்க முடியாத சூழல் இருந்தது. அந்த இடைவேளைக்கு பிறகு தலைமை செயற்குழு நடப்பதால் எல்லோரும் உற்சாகமாக சந்தித்து மகிழ்ந்தனர். மண்டபத்தில் மஜக கொடி, மப்ளர், தொப்பி, டி ஷர்ட், வேஷ்டி ஆகியன மலிவு விலை விற்பனையில் இருந்ததால் அந்த இடத்திலும் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை 10 மணிக்கு கூடிய சிறப்பு நிர்வாக குழு முடிந்ததும் தலைமை நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக வர, காலை 11 மணிக்கு
2021 சட்டசபை தேர்தல் முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைமை நிர்வாகக் குழுவுக்கு வழங்கியது மஜக தலைமை செயற்குழு…!
ஜனவரி 23, மனிதநேய ஜனநாயக கட்சியின் 9-வது தலைமை செயற்குழு கூட்டம் நெல்லையில் உள்ள ஹோட்டல் அஃப்னா ஹாலில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., தலைமையில் நடைப்பெற்றது. இதில் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ். ரிபாயி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஈரோடு பாரூக், இராவுத்தர்ஷா, மண்டலம் ஜெய்னுலாபிதீன், தைமிய்யா, மன்னை. செல்லச்சாமி, மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், சீனி முகம்மது ஆகியோர் பங்கேற்றனர். மாநில துணை செயலாளர்கள் புதுமடம் அணீஸ், ஷமீம், சைபுல்லாஹ், பல்லாவரம் ஷஃபி, நாகை முபாரக், பாபு ஷாகின்ஷா, நெய்வேலி இப்ராகிம், துரை முகம்மது, அப்சர் செய்யது, காயல் சாகுல் மற்றும் அணிகளின் மாநில செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. தேர்தல் நிலைபாடு: எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலில் எத்தகைய அரசியல் நிலைபாடுகள் எடுப்பது என்பது குறித்து இச்செயற்குழுவில் விரிவாக கருத்து கேட்கப்பட்டது. அறுதிப் பெரும்பான்மையானவர்களின் கருத்துப்படி, இதில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைமை நிர்வாகக் குழுவுக்கு இச்செயற்குழு வழங்குவதாக தீர்மானிக்கப்படுகிறது. 2. தேர்தல் மாதங்கள்: வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் யுக்திகளில் ஒன்றாக, வருகின்ற பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களை மஜகவின் தேர்தல்