நாகை. அக்.28., இன்று நாகை தொகுதியில், நாகை நகராட்சி சார்பில் M.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் குப்பைகள் மற்றும் கழிவுகளுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. நாகூர் சிவன் கோவில் அருகே, சிவன் கோவில் குருக்கள் சிவராமன் அவர்கள் முதல் குப்பைத் தொட்டியை பெற்றுக் கொண்டார். அவருடன் கோவில் நிர்வாகிகள் ராஜா மற்றும் முருகானந்தம் ஆகியோரும் உடனிருந்தனர். வீடுகள் தோறும் இலவச குப்பைத் தொட்டிகள் வழங்கி, விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது. நகராட்சி சார்பில் வாகணங்கள் வரும்போது, இத்தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்ட குப்பைகளை கொட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. பின்னர் குஞ்ஜாலி மரைக்காயர் தெரு, கடைத்தெரு, யானைக் கட்டி சந்து , புதுமனைத் தெரு, நாகூர் பிரதான சாலை ஆகிய இடங்களில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இதில் சமூக ஆர்வலர் ஷேக் தாவூது மரைக்காயர், நகராட்சி ஆனையர் ஜான்சன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். வழியெங்கும் பொதுமக்கள் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்ட குறைகள் குறித்துக் கொள்ளப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு MLA அவர்கள் உத்தரவிட்டார்கள். ஆங்காங்கே சாக்கடை தேக்கங்களை சரி செய்யுமாறும், குப்பைகள் தேங்கும் இடங்களில் உடனே அதனை அகற்றுமாறும், நகராட்சி கழிப்பிடங்களை சுகாதாரமாக பராமரிக்மாறும்
சட்டமன்றம்
வேலூர் தொகுதியில் வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் மஜகவின் முன்னாள் வேட்பாளர்…
வேலூர்.அக்.27., கடந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடையா விட்டாலும், மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளரும், முன்னாள் வேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான S.S.ஹாரூன் ரசீது அவர்கள் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில், (பொதுமக்கள் கோரிக்கைகளில்) ஒன்று "வேலூர் ஓல்டு டவுன் குடிநீர் தேக்க தொட்டி பராமரிப்பு". வேலூர் சார்பனமேடு பகுதியில் அமைந்துள்ள இந்த குடிநீர்தேக்கத் தோட்டி பல்லாயிரக்கணக்கான, ஏறத்தாழ 80 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களின் ஜீவாதாரமாக திகழ்ந்து வருகின்றது. மேற்கண்ட குடிநீர் நீர்தேக்க தொட்டி பராமறிப்பற்ற நிலையிலும், நீரேற்று நிலையத்தை சுற்றிலும் தண்ணீர் தேங்கியும், நீர்தேக்க தொட்டி திறந்த நிலையிலும், இத் தொட்டியின் உள் புறத்திலும், வெளிப்புறத்திலும் கோடிக் கணக்கில் கொசுக்கள் இருப்பதாலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் குடிநீராக உபோயோகிக்கும் இந் நீர் தேக்க தொட்டி மாநகராட்சியின் நிர்வாக அலட்சியப்போக்கால் குடிநீர் மாசடைந்துள்ளது. தமிழகத்தையே அச்சுறுத்துகின்ற டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்ற ஆட்கொல்லி நோய்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாறியதை உணர்ந்த மனிதநேய ஜனநாயக கட்சியினர், முன்னாள் சட்டமன்ற வேட்பாளர் S.S.ஹாரூன் ரசீது அவர்களின்
நாகை தீயணைப்பு நிலையம்-அரசு போக்குவரத்து பணிமனை ஆகியவற்றை பார்வையிட்டார் நாகை MLA!
நாகை.அக்.24., நாகப்பட்டினம் தொகுதியில் உள்ள பழைய தீயணைப்பு நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் பார்வையிட்டு அங்குள்ள ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அங்குள்ள பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட, கடந்த கூட்டத் தொடரின் போது முதல்வரிடம் கடிதம் கொடுத்திருப்பதாகவும், இது குறித்து மீண்டும் நினைவுட்டுவதாகவும் கூறினார். மேலும் அங்குள்ள ஊழியர்களின் தேவைகளையும் கேட்டறிந்து குறித்துக் கொண்டார். பிறகு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைக்கு சென்று டிரைவர்கள், நடத்துனர்கள் தங்குமிடத்தை பார்வையிட்டு அங்குள்ள ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அங்குள்ள பழைய கட்டிடம் விரைவில் பழுதுபார்க்கப்படும் என்றும் கூறினார். பிறகு பணிமனையின் பல்வேறு இடங்களையும் பார்வையிட்டு, அவற்றின் தேவைகளை கேட்டறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் கூறினார். இந்நிகழ்வில் மஜக மாநில துணைச் செயலாளர்கள் ஷேக் அப்துல்லா, பல்லாவரம் ஷஃபி, மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை.முபாரக், மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லாஹ், IT WING மாவட்ட செயலாளர் சுல்தான், தொகுதி செயலாளர் தமீஜூதீன், நாகை நகர செயலாளர் சாகுல் ஹமீது, பொருளாளர் அஜீஸ் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்: நாகை சட்டமன்ற
அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது…! மஜக வேண்டுகோள்…!!
(மஜக பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA வெளியிடும் அறிக்கை) "நிதி ஆயோக்" பரிந்துரை எனும் பெயரில் மத்திய அரசு எடுத்து வரும் பல முடிவுகள் நாட்டை சீர்குலைக்கும் வகையிலே இருக்கின்றன. இப்போது அங்கன்வாடி மையங்களை குறிவைத்திருகிறார்கள். அங்கன்வாடி மையங்களில் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அங்கன்வாடி மையங்களில் உடனுக்குடன் சமைத்து சுவையான, சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த திட்டத்திற்கு மூடு விழா நடத்திட மத்திய அரசு திட்மிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. ஒரு நபருக்கு இதற்கு ஆகும் மாதாந்திர தொகையான 180 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி விடுவது என இதற்கு விளக்கமளித்துள்ளனர். மொத்தமாக ஒரு பொருளை தயாரிக்கும்போது ஆகும் செலவும், தனித்தனியாக தயாரிக்கும்போது ஆகும் செலவும் வெவ்வேறு அளவு கோலானது என்ற அடிப்படை அறிவு, நிதி வல்லுனர்களுக்கு தெரியாமல் போனதா? என்று தெரியவில்லை. 180 ரூபாயில் 1 வாரத்திற்கு கூட ஊட்டச்சத்துக்களை வாங்கிக் கொடுக்க முடியாது. மேலும், இத்தொகையை பெற்றோர்கள் குழந்தைகளுக்குதான் செலவழிப்பார்கள் என்பதற்கும் உத்திரவாதம் இல்லை. ஊட்டத்சத்து குறைவால், குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றல் குறைந்து விடக் கூடாது என்பதும், அது எதிர்கால இந்தியாவை பாதித்து விடக் கூடாது என்பதும் தான்
கெயில் எரிவாயு குழாய் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது! தமிமுன் அன்சாரி MLA, கருணாஸ் MLA, தனியரசு MLA வேண்டுகோள்!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது.கருணாஸ் MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA வெளியிடும் கூட்டறிக்கை) கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் வழியே 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 20 மீட்டர் அகலத்திற்கு எரிவாயு குழாய் பதிக்க இந்திய எரிவாயு கட்டுப்பாட்டு நிறுவனம் (கெயில்) மத்திய அரசிடம் அனுமதி பெற்றது. விவசாய நிலங்களை பாதிக்கும் இத்திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் சட்டமன்றத்திலேயே அறிவித்தார்கள். தமிழக அரசின் சார்பில் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறு சீராய்வு மனு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இத்திட்டத்தை பசுமை கொழிக்கும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் அமல்படுத்த முனைவது கண்டனத்திற்குரியது. விவசாய நிலங்களை பாழ்படுத்துவதை அனுமதிக்க முடியது. கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரத்திலேயே எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் விளை நிலங்களின் வழியேத்தான் எரிவாயு குழாய்கள் பதிப்போம் என அடம் பிடிப்பதை ஏற்கவே முடியாது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளின் வழியாக மட்டுமே