(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ வெளியிடும் அறிக்கை..) டெல்லி உயர் நீதிமன்ற முனனாள் தலைமை #நீதிபதி #ராஜேந்தர்_சிங்_சச்சார் (94) முதுமை காரணமாக டெல்லியில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் நேர்மையின் அடையாளமாய், நீதியின் சிகரமாய் தனது பணிக்காலத்தில் வாழ்ந்து சென்றார். அவரது தீர்ப்புகள் யாவும் மனிதாபிமானத்தின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. ஓய்வு பெற்ற பிறகு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காக குடிமக்கள் சுதந்திரத்திற்கான சங்கத்தில் இணைந்து பணியாற்றினார். பின்தங்கிய மக்களுக்காக குரல் கொடுத்தார். அதனடிப்படையிலேயே இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மூலம் அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக ராஜேந்திர சிங் சச்சார் இருந்தார். இந்திய முஸ்லிம்களின் வாழ்நிலை, தலித்துகளின் நிலையைவிட மோசமாக இருக்கிறது என்று அந்த அறிக்கை கூறியது. அந்த அறிக்கையின் ஆதார தகவல்கள் நாட்டையே உலுக்கியது. அந்த அறிக்கை நாடெங்கிலும் விவாதிக்கப்பட்டு அதன் பல அம்சங்கள் பல மாநிலங்களில் அமலுக்கு கொண்டுவரப்பட்டன. கடந்த 2013 ஆம் ஆண்டு அவரை டெல்லியில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பத்திரிக்கையாளர் அத்தேஸ் அவர்களும் உடனிருந்தார். சச்சார் கமிட்டி ஆய்வுக்காக
அறிக்கைகள்
ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்! மஜக கோரிக்கை!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் அறிக்கை) தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோஹித் அவர்கள் நியமிக்கப்பட்டது முதல் தொடர்ந்து சர்ச்சைகள் வெடித்து வருகிறது. பேராசிரியர் நிர்மலா தேவி பேசிய ஆடியோவில், மாணவிகளை பாலியல் ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்ததும், அதில் கவர்னர் பெயரை சொல்லியிருப்பதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சர்ச்சை ஓய்வதற்க்குள் தி வீக் பத்திரிகையின் பெண் நிருபரை கண்ணத்தில் தட்டிக் கொடுத்திருப்பது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்விரு சம்பவங்களும் கவர்னரின் நன்மதிப்பை மக்கள் மத்தியில் குலைத்திருக்கிறது. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசை கலந்து ஆலோசிக்காததும், தேர்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கு போட்டியாக தன்னிச்சையாக ஆய்வுகளை நடத்துவதும் தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியையும், கொந்தளிப்புகளையும் உருவாக்கியிருக்கிறது. எனவே, தொடர்ந்து சர்சைகளில் சிக்கி வரும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவண், #மு_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 18.04.18
காவிரி போராட்டக்காரர்களை விடுதலை செய்க ! தமிழக முதல்வருடன் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA நேரில் சந்திப்பு!
சென்னை.ஏப்.16., இன்று (16-04-2018) தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், 20 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது காவிரி உரிமைக்காக போராடிய மஜக மாநில பொருளாளர் SS. ஹாரூன் ரசீது மற்றும் நிர்வாகிகள் 6பேர்கள் உட்பட போராட்டக்காரர்கள் அனைவர் மீதும் போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும், அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஜுன் 12 தேதிக்குள் குறுவை சாகுபடிக்கு காவிரி தண்ணீர் தேவை என்பதால், தமிழக அரசின் சார்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும், வலியுறுத்தினார். மேலும் தூத்துக்குடி ஸ்டர்லைட் எதிர்ப்பு போராட்டம், நியுட்ரினோ திட்ட எதிர்ப்பு போராட்டம் ஆகியவை குறித்தும், அதில் தமிழக அரசு மக்கள் உணர்வுகளை புரிந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். தங்களது கருத்துகளை நிச்சயம் பரீசீலிப்பதாக தமிழக முதல்வர் பதிலளித்தார். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையாகம்_சென்னை 16.04.2018
பொய் வழக்குகளை வாபஸ் பெறுக!
(தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை) நேற்று பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய தமிழின உணர்வாளர்கள் மீது காவல்துறை பல வழக்குகளை பதிவு செய்திருக்கிறது. மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீது உள்ளிட்ட 8 மஜகவினரும், ஏராளமான நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட தொண்டர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம். காவேரி மேலாண்மை வாரியத்திற்காக போராடியவர்கள் மீது தடியடி உள்ளிட்ட மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையின் செயல் நியாயமற்ற செயலாகும். எனவே அனைவரின் மீதான வழக்குகளையும் திரும்ப பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவன், தனியரசு MLA, தமிமுன் அன்சாரி MLA, கருணாஸ் MLA.
நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்படும் ! நாகூரில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேச்சு !
நாகை. பிப்.11., இன்று நாகூரில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கத்தின் ( MJTS ) நாகை (தெ) மாவட்ட செயலாளர் அல்லா பிச்சை அவர்களின் மகள் திருமணத்தில் பங்கேற்று மஜக செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றினார். அப்போது அவர் பேசிய உரையின் சுருக்கம் பின்வருமாறு:- நாகூர் மக்கள் எனக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வாக்களித்துள்ளார்கள். அதனால் சாதி, மதங்களை கடந்து அனைவருக்கும் நான் பணியாற்றுகிறேன். பல நல திட்டங்களை நாகூரில் அமல்படுத்தி வருகிறேன். காரைக்கால் - வாஞ்சூரில் அமைந்துள்ள மார்க் துறைமுகத்தில் இறக்கப்படும் நிலக்கரி இறக்குமதியால் நாகூர், பட்டிணச்சேரி, பனங்குடி பகுதி மக்கள் பாதிக்கப்படுவதை முதல் முதலில் நான் தான் சட்டமன்றத்தில் பேசினேன் என்பதை அனைவரும் அறிவர். விதிகளை மீறி செயல்படும் மார்க் துறைமுகத்திற்கு எதிராக, நிலக்கரி இறக்குமதியை முற்றிலும் தடை செய்ய கோரி விரைவில் நாகூரில் மஜக சார்பாக பிரம்மாண்டமான போராட்டம் நடத்தப்படும். அது தமிழ்நாடு, புதுச்சேரி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமையும். அதில் தமிழகத்தின் பிரபல தலைவர்கள் பங்கேற்பார்கள். விரிவான ஆலோசனைக்கு பிறகு, அது எத்தகைய போராட்டம் என்பது