பொய் வழக்குகளை வாபஸ் பெறுக!

(தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை)

நேற்று பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய தமிழின உணர்வாளர்கள் மீது காவல்துறை பல வழக்குகளை பதிவு செய்திருக்கிறது.

மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீது உள்ளிட்ட 8 மஜகவினரும், ஏராளமான நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட தொண்டர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

காவேரி மேலாண்மை வாரியத்திற்காக போராடியவர்கள் மீது தடியடி உள்ளிட்ட மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையின் செயல் நியாயமற்ற செயலாகும்.

எனவே அனைவரின் மீதான வழக்குகளையும் திரும்ப பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இவன்,

தனியரசு MLA,

தமிமுன் அன்சாரி MLA,

கருணாஸ் MLA.