மஜக மாநில பொருளாளர் மீது தாக்குதல் நடத்தி கைது செய்த காவல் துறையை கண்டித்து, கோவை மாவட்ட மஜகவினர் போராட்டம்!

கோவை.ஏப்13., காவிரி விவகாரத்தில் போராட்டம் நடத்திய தலைவர்களை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடத்திய மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீது அவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்து சிறையில் அடைத்த காவல் துறையைக் கண்டித்து மஜக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் போராட்டம் நடைப்பெற்றது.

இப்போராட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர், நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளர் சசி, கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட பொறுப்பாளர் பரமசிவம், ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் மஜக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் லேனாஇஷாக், மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் முஹம்மதுரபீக், சிங்கை சுலைமான், ABT.பாருக், ATR.பதுருதீன், முஸ்தபா, பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜாஜெமீஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப், திருப்பூர் மாவட்ட செயலாளர் ஹைதர் அலி, இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், துணை செயலாளர்கள் சபீர், அன்சர், சுற்று சூழல் அணி மாவட்ட செயலாளர் முஹம்மது சலீம், துணை செயலாளர் அபு, மருத்துவ அணி செயலாளர் அபு, மாணவர் இந்தியா செயலாளர் மன்சூர், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அஜிஸ், இப்ராஹிம், உமர்.

பகுதி நிர்வாகிகள் பூ காஜா, காஜாஉசேன், ஹாருண்ரஷீது, ரஹ்மத்துல்லா, அப்பாஸ், அபு, மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்ப்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
13.04.18