மஜக பொருளாளரை விடுதலை செய்க! நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

நாகை. ஏப்.14., சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சி பொருளாளர் ஹாரூன் ரசீது மற்றும் மஜக நிர்வாகிகளின் மீது பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்த காவல்துறையை கண்டித்தும் அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்து விடுதலை செய்ய கோரியும் நாகை தெற்கு மாவட்ட பொறுப்புகுழு தலைவர் வடகரை M.பரகத் அலி தலைமையில் நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலாளர் திட்டச்சேரி செய்யது ரியாசுதீன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் சாகுல் ஹமீது, ஜாகிர் உசேன், முஜிபுர் ரஹ்மான், மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான் முன்னால் மாவட்ட நிர்வாகிகள் ஷேக் மன்சூர்,அல்லா பிச்சை, தெத்தி ஆரிப், பிஸ்மி யுசுப்,திருப்புண்டி அஜிஸ், ரெக்ஸ் சுல்தான், ஜலாலுதின், தம்ஜூதீன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இராமதாஸ் , புருனை மண்டல செயலாளர் தாஹா மரைக்காயர் , மஜக பகுருதீன் அலி, மஜக டேவிட் , ஒன்றிய செயலாளர்கள் திருப்புன்டி சபுர்தீன், தெத்தி பாவா சாஹிப், நகரச் செயலாளர்கள் சாகுல் ஹமீது , ஷேக் இஸ்மாயில், அகமதுல்லாஹ் ,நகரப் பொருளாளர்கள் அஜிஸுர் ரஹ்மான் ,இப்ராஹிம், கிளை செயலாளர்கள் , திருப்புன்டி அஷ்ரப் , பொருள்வை சஹாபுதின், வவ்வை சாகுல் ,ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.இறுதியில் நகர பொருளாளர் அஜிஸுர் ரஹ்மான் அவர்கள் நன்றி உரையாற்றினார்.தகவல்;#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி#MJK_lT_WING#மஜக_நாகை_தெற்கு_மாவட்டம்