விவசாயிகளுக்காக தொடர்ந்து போராடுவோம்! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேச்சு!

சென்னை.ஏப்.13., சென்னை சேப்பாக்கத்தில் தமிழக விவசாயிகளின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், தலைவர் காவேரி தனபாலன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA கலந்துக் கொண்டு உறையாற்றினார். அப்போது காவேரி மேலாண்மை அமைக்க கோரி தமிழக விவசாயிகள் நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் மஜக பங்கேற்கும் என்றார். கர்நாடகவில் சித்தா ராமையாவும், எடியுரப்பாவும், தேவ கொளடாவும் ஒரே குரலில் காவேரிக்காக போராடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்கிறோம். முதலில் இவ்விசியத்தில் திமுகவும், அதிமுகவும் சண்டை போடுவதை நிறுத்த வேண்டும். எல்லோரும் இணைந்து காவேரிக்காக குரல் கொடுக்கவே மக்கள் விரும்பிகிறார்கள் என்று பேசினார்.

‌தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி

#MJK_IT_WING

#மஜக_தலைமையகம்