காவிரி போராட்டக்காரர்களை விடுதலை செய்க ! தமிழக முதல்வருடன் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA நேரில் சந்திப்பு!

சென்னை.ஏப்.16., இன்று (16-04-2018) தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், 20 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.

அப்போது காவிரி உரிமைக்காக போராடிய மஜக மாநில பொருளாளர் SS. ஹாரூன் ரசீது மற்றும் நிர்வாகிகள் 6பேர்கள் உட்பட போராட்டக்காரர்கள் அனைவர் மீதும் போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும், அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஜுன் 12 தேதிக்குள் குறுவை சாகுபடிக்கு காவிரி தண்ணீர் தேவை என்பதால், தமிழக அரசின் சார்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும், வலியுறுத்தினார்.

மேலும் தூத்துக்குடி ஸ்டர்லைட் எதிர்ப்பு போராட்டம், நியுட்ரினோ திட்ட எதிர்ப்பு போராட்டம் ஆகியவை குறித்தும், அதில் தமிழக அரசு மக்கள் உணர்வுகளை புரிந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

தங்களது கருத்துகளை நிச்சயம் பரீசீலிப்பதாக தமிழக முதல்வர் பதிலளித்தார்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையாகம்_சென்னை
16.04.2018