இன்றைய நாகரீக வளர்ச்சியில் ... எல்லாவற்றையும் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தோன்றினாலும்.. மனிதர்களின் வேலைகளை இலகுவாக்க எண்ணற்ற உபகரணங்கள் வந்தாலும்.. நாம் உண்ணும் உணவு பொருளை விளைவிக்க விவசாயிகளால் மட்டுமே முடியும்.. இதில் லாபம் பெரிதாக இல்லையென்றாலும் மண் வளத்தை பக்குவப்படுத்தி மக்கள் நலமுடன் வாழ தன் இரத்தத்தை வேர்வையாக சிந்தி ஊழியம் செய்யும் ஒப்பற்ற ஜீவன்களான விவசாயிகள் தினத்தை நினைவு கூறுவதில் பெருமிதம் கொள்கிறது மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில விவசாயிகள் அணி பிரிவு.! தோழர்களே... ''இந்தியா ஒரு விவசாய நாடு’' என்ற பழம்பெருமையைப் பறைசாற்றிக் கொள்ளும் அரசாங்கங்கள், விவசாயத்தை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் மூலமாக நாட்டை மட்டுமல்ல விவசாய பெருமக்களையும் வீழ்ச்சியில்தான் தள்ளிக் கொண்டு உள்ளன.! டெல்லியில் தொடர்ச்சியான விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் போராடிய விவசாயிகள் மீது எண்ணற்ற வழக்குகளை பதிவு செய்து போராட்டத்தை முடக்கிய மோடி தலைமையிலான பாஜக அரசு! அம்பானி அதானிக்கு சேவகம் செய்வதில் தனதுவிசுவாசத்தை காட்டுகிறது.! நினைத்தாலே வேதனை மிஞ்சுகிறது. உண்ண உணவு கொடுக்கும் விவசாயி உணவில்லாமல் எலிக்கறி தின்று மரணிக்கும் அவலம், இன்றும் தொடர்கிறது. பொதுவாக விவசாயத்திற்கு அரசாங்கத்தின் ஆதரவு போதிய அளவில் இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை விட்டு விரக்தியோடு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மற்றொரு பக்கம், 'விவசாயம் இனி இளைஞர்கள் கைகளில்’
மஜக விவசாய அணி
மஜக கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்..!
கோவை.டிச.22., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டசெயலாளர் M.H.அப்பாஸ் தலைமையில் நேற்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில துணைப் பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், மாநில இளைஞரணி துணைசெயலாளர் லேனா இஷாக், மாநில மீனவர் அணி துணை செயலாளர் ஜாபர், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், ரபீக், சிங்கை சுலைமான், மாவட்ட இளைஞரணி செயலாளர் PMA. பைசல், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், மருத்துவ அணி மாவட்டசெயலாளர் அபு, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் நூருல் அமீன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கோவை_மாநகர்_மாவட்டம் 21.12.17
புதிய வீரியத்துடன்..! திருப்பூண்டி மஜக..!!
நாகை. டிச.18., திருப்பூண்டியில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) கிளை சார்பாக இன்று புதிய கிளை அலுவலகம் திறப்பு, கொடி ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M. தமிமுன் அன்சாரி அவர்கள் திருப்பூண்டி கிளைக்கு வருகை தந்து மூன்று இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மஜக கொடிகம்பங்களில் கொடி ஏற்றினார். அதை தொடர்ந்து திருப்பூண்டி கிளையின் சார்பாக பிரம்மாண்ட கிளை அலுவலகத்தையும் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் திரளானோர் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கதுல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஷேக் மன்சூர், யூசுப்தீன், ஹமீது ஜெஹபர், மாவட்ட அணி செயலாளர்கள் அப்துல் அஜிஸ், சாகுல் ஹமீது, பிஸ்மி யூசுப், தெத்தி ஆரிப், அல்லா பிச்சை, ரெக்ஸ் சுல்தான், அப்துல் ரஹ்மான் மற்றும் நகர, ஒன்றிய, கிளைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருப்பூண்டி கிளை செயலாளர் அஸ்ரப் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
கீழக்கரையில் மஜக தலைவர்கள் முகாம்..!
கீழக்கரை. டிச.09., இராமநாதபுரம் மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் புதிய உறுப்பினர்கள் இணைப்பு ,பிரமுகர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள், வருகை தந்தார். தொண்டி, தேவிப்பட்டினம் , இராமநாதபுரம் சந்திப்புகளை முடித்துவிட்டு மாலை 6மணியளவில் கீழக்கரைக்கு வருகைதந்து முன்னாள் மாவட்ட செயலாளர் ஹபீப் அவர்கள் திருமணத்தில் பங்கேற்றார். அப்போது கீழக்கரையின் முக்கிய பிரமுகர்கள், ஜமாத்தார்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரை சந்தித்து மஜகவின் பணிகள் குறித்தும், நடப்பு அரசியல் நிகழ்வுகள் குறித்தும் உரையாடினார். அவருடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், இணை பொதுசெயலாளர் மைதீன் உலவி, துணை பொதுசெயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் ஆகியோரும், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் எ. எம். ஹாரிஸ், விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக் ஆகியோரும் வருகை தந்தனர். இந்நிகழ்வுகளில் மஜக மாவட்ட நிர்வாகிகள் இலியாஸ், முகவை பீர், சோனப்பூர் அஜ்மல், செய்யாது இப்ராஹிம், அப்துல் கபூர், அப்துல் நசீர், செய்யது அபுதாஹிர், சுல்தான் சீனி அபுதாஹிர், ஹபீப் முகம்மது , தொண்டி முகம்மது ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_இராமநாதபுரம்_மாவட்டம்
விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் மஜக பொருளாளர் பங்கேற்பு..!
திருவண்ணாமலை.டிச.09., கடந்த மாதம் 4-ஆம் தேதியன்று திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், போந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரன் வங்கியின் அடியாட்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்திற்கு காவல்துறை இதுவரையிலும் எந்தவொரு சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்காததை கண்டித்து, இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கே.பாலகிருஷ்ணன் Ex.MLA, அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை கோட்டாசியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், அமைப்பின் தலைவர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது., M.Com அவர்கள் கலந்து கொண்டு எழுச்சி உரை நிகழ்த்தினார். ஞானசேகரன் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்கவும், மரணத்திற்கு காரணமான வங்கியின் மேலாளர் மற்றும் அடியாட்களான ராஜா, வெங்கடபதி ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற இழப்பு இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். மத்திய அரசும், தமிழக அரசும் தொடர்ந்து தமிழ்நாட்டில் விவசாயிகள் பிரச்சினை , மீனவ சமுதாய பிரச்சனைகள் தீர்வு காணாமல் இருப்பதும் வாடிக்கையாகிவிட்டது என்றும் மஜக சார்பில் கண்டனத்தை பதிவுசெய்தார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை