புதிய வீரியத்துடன்..! திருப்பூண்டி மஜக..!!

image

image

image

image

நாகை. டிச.18., திருப்பூண்டியில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) கிளை சார்பாக இன்று புதிய கிளை அலுவலகம் திறப்பு, கொடி ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

மஜக  பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான
M. தமிமுன் அன்சாரி அவர்கள் திருப்பூண்டி கிளைக்கு வருகை தந்து மூன்று இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மஜக கொடிகம்பங்களில் கொடி ஏற்றினார்.

அதை தொடர்ந்து திருப்பூண்டி கிளையின் சார்பாக பிரம்மாண்ட கிளை அலுவலகத்தையும் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் திரளானோர் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைந்தனர்.

இந்நிகழ்வில் மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கதுல்லாஹ், மாவட்ட துணைச்  செயலாளர்கள் ஷேக் மன்சூர், யூசுப்தீன், ஹமீது ஜெஹபர், மாவட்ட அணி செயலாளர்கள் அப்துல் அஜிஸ், சாகுல் ஹமீது, பிஸ்மி யூசுப், தெத்தி ஆரிப், அல்லா பிச்சை, ரெக்ஸ் சுல்தான், அப்துல் ரஹ்மான் மற்றும் நகர, ஒன்றிய, கிளைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூண்டி கிளை செயலாளர் அஸ்ரப் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT-WING
#நாகை_தெற்கு_மாவட்டம்
18.12.17