You are here

மஜக நாகை வடக்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம்..! தலைமை செயற்குழு உறுப்பினர் AS.அலாவுதீன் அவர்கள் பங்கேற்பு..!!

image

image

நாகை.டிச.31., நாகை வடக்கு மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், பொறையாரில் நேற்று மாலை 6 மணியளவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை வடக்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடைப்பெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் N.M.மாலிக் தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களா தலைமை நிர்வாக குழு உறுப்பினர் சகோ.A.S.அலாவுதீன் அவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான் ஆகியோர் வருகை தந்தனர்.

மாவட்ட துணைச் செயலாளர்கள் M.அபுசாலிஹ், A.J.சாகுல் ஹமீது, S.மிஸ்பாஹுதீன் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் நாகை வடக்கு மாவட்டத்தில் ஒன்றிய வாரியாக வளர்ச்சி பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து கலந்தாய்வு நடைப்பெற்றது.

கூட்டத்தின் முடிவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1)  14 ஆண்டுகள் நிறைவு செய்த அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும் சாதி, மத, அரசியல் பேதமின்றி பொதுமன்னிப்பு கீழ் விடுதலை செய்ய வேண்டுமென ஆட்சியர்களிடம் வலியுறுத்துவது.

2) பீகார் மாநிலம் போன்று தமிழகத்திலும் உடனடியாக பூரண மது விலக்கு கொண்டு வரவேண்டும்.

3) இயற்கை விவசாயத்தை மத்திய, மாநில அரசுகள் ஊக்கு விக்க வேண்டும்.

4) காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துவது.

5) முத்தாலக் விவகாரத்தில் சட்டம் இயற்றுவதை மத்திய அரசு கை விட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_நாகை_வடக்கு_மாவட்டம்
30.12.17

Top