தூத்துக்குடி. மார்ச்.13., தூத்துக்குடி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் "தாமிரபரணி ஆற்றில் நீர் எடுக்கும் பன்னாட்டு ஆலைகளுக்கு நிரந்தர தடைவிதிக்க கோரியும்"", ""தூத்துக்குடி மாவட்டத்தை சுடுகாடாக மாற்றத்துடிக்கும் ஸ்டெர்லைட் மற்றும் DCW ஆலைகள் தண்ணீர் எடுக்க தடை கோரியும்"", ""மீனவ இளைஞர் பிரிட்சோவை சுட்டுக்கொன்ற இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய மோடி அரசை கண்டித்தும்"" நேற்று 12-03-2017 மாலை ஆத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் ஜாஹீர் உசேன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் நவாஸ், மாவட்ட துணை செயலாளர் காதர் பாட்சா ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட துணை செயலாளர் முகம்மது நஜீப் வரவேற்புரையாற்றினார். மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.Mcom., அவர்களும், திராவிட விடுதலைக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் #பால்_பிரபாகரன் அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் #அகமது_இக்பால் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் #அழகு_முத்துப்பாண்டியன் அவர்களும், மஜகவின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் #மீரான் அவர்களும், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் #கலீல்_ரஹ்மான் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இறுதியாக ஆத்தூர் நகர் செயலாளர் அன்வர் நன்றி கூறினார். தகவல்
இரண்டாம் ஆண்டில் மஜக
இரண்டாம் ஆண்டில் மஜக
திண்டுக்கல்லில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA பேட்டி!
திண்டுக்கல் : மார்ச் 12,R.K.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பாடுபடும்...! மாணவர்கள் இளைஞர்களின் போராட்டங்கள் எதிர்கால தமிழக அரசியலை தீர்மானிக்கும். வங்ககடலில் இனி ஒரு தமிழக மீனவன் கொல்லப்படுவதை தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். மத்திய அரசு இவ்விசயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா அம்மா அவர்களின் மறைவு, கலைஞரின் உடல்நலக்குறைவு ஆகியவற்றால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை. அதிமுகவை பிளக்க பிஜேபி முயற்சிக்கிறது, திராவிட கட்சிகளை அழிக்க துடிக்கிறது, தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் ஒருகாலத்திலும் காலூண்ற முடியாது. உத்தர பிரதேசத்தில் பாஜக வெற்றிப்பெற்றது அதிர்ச்சியளிக்கிறது. மதச்சார்பற்ற, சமூகநீதி சக்திகளுக்கு இது தற்காலிக பின்னடைவாகும். மணிப்பூரில் 16 ஆண்டு காலம் அந்த மக்களுக்காக தன்னையே தியாகம் செய்த ஐரோம் ஷர்மிளாவுக்கு 90 வாக்குகள் மட்டுமே கிடைத்தது ஏமாற்றமளிக்கிறது. தியாகத்திற்கு மரியாதை இல்லையோ என தோன்றுகிறது. இவ்வாறு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் திண்டுக்கல்லில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பேட்டியின்போது இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா, தலைமை
மஜகவின் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் செயற்குழு கூட்டம்…
புதுகை.மார்ச்:11., புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு கூட்டம்... தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர் அவர்கள் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் ராவுத்தர்ஷா முன்னிலையிலும் நடைப்பெற்றது... மாவட்ட செயலாளர் துரைமுஹம்மது வரவேற்று பேசினார் இந்த கூட்டத்தில் தலைமையின் அறிவுறுத்தலின்படி நிர்வாக சீர்திருத்ததிற்க்காக அறந்தாங்கியை தலைமையிடமாக கொண்டு புதுக்கோட்டை கிழக்கு மாவட்டமாக அறிவிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்... இந்த கூட்டத்தில் மாநில தொழில் நுட்ப அணி செயலாளர் கோட்டை முஹம்மது ஹாரீஸ், மாவட்ட துணைச்செயலாளர் முஹம்மது ஜான் மாவட்ட பொருலாளர் ரஹீம் தாலிஃப், அறந்தை அஜ்மீர் அலி, அப்துல்ஹமீது, முபாரக்அலி, நகரச்செயலாளர் முஹம்மது குஞ்சாலி உட்பட மகஜ தொண்டர்களும் நிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்... முடிவில் மாவட்ட பொருலாளர் ரஹீம்தாலிஃப் நன்றி கூறினார். #தகவல்_தொழில்_நுட்பஅணி #மனிதநேய_ஜனநாயக_கட்சி #MJK_IT_WINK #புதுக்கோட்டை_மாவட்டம்
திண்டுக்கல்லில் மாணவர் இந்தியா விழிப்புணர்வு முகாம்…
திண்டுக்கல்லில் இன்று (12.03.17) மாணவர் இந்தியாவின் சார்பில் 'சமூக நலனில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்' நடைப்பெற்றது. இதில் பொது சேவை, பண்பாடு, தன்னம்பிக்கை, நேர்த்தியான செயல்பாடுகள், மாணவர் சமூகத்தின் வாழ்வியல், பெற்றோரின் கடமைகள், மன அழுத்தங்களை தாண்டி தேர்வில் வெற்றி பெறுதல், என பல்வேறு தலைப்புகளில் துறை சார்ந்த வல்லுனர்கள் சிறப்பாக வகுப்பெடுத்தனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று மாணவர்களின் ஆராவாரத்திற்கிடையே எழுச்சியுரையாற்றினார். இந்நிகழ்வில் காந்தி கிராம பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியை குருவாம்மாள், ஜமால் முகம்மது கல்லூரி பேராசிரியர் பீர்பாஷா, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தோழர் மு.ப. கணேசன், கூடைப்பந்தாட்ட கழகத் தலைவர் யூசுப் அன்சாரி மற்றும் வினோத் ராஜதுறை உள்ளிட்டோர் உரையாற்றினர். மஜக மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா, மாவட்ட பொருளாளர் மரைக்காயர் சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் இந்தியாவின் தலைமை நிர்வாகிகள் அஸாருதீன், ஜாவீத், பஷீர் அஹமது ஆகியோர் நிகழ்ச்சியை செம்மைப்படுத்தினர். மாணவர் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள் முகம்மது பிர்தௌஸ், மரியமனோஜ், சதீஸ் குமார், முனாப்தீன், மோகன் காமாட்சி, உமர் முக்தார், ரபிக் உள்ளிட்டோர்
பஹ்ரைன் மண்டல மாதாந்திர கூட்டம்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் வளைகுடா பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவையின் பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆலோசனை கூட்டம் அலுவலகத்தில் 10:03:2017 மாலை 5 மணிக்கு மண்டல செயலாளர் சகோதரர் நாச்சிகுளம் ஜான் முகம்மது அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மஜக வின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தையும், மாநில பொதுச்செயலாளர் சகோதரர் தமீமுன் அன்சாரி.MLA அவர்களின் சிங்கப்பூர் விழா குறித்தும் மண்டல துணை செயலாளர் வல்லம் ரியாஸ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இதில் மண்டல நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பங்குகொண்டனர். புதிய பாதை,புதிய பணத்தின் தொடக்கமாக இருக்கும் ம ஜ வின் செயல்பாட்டால் சென்னை, இராமநாதபுரம், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த எழுச்சிமிகு இளைஞர்கள் தங்களை ம ஜ க வில் இணைத்துக்கொண்டர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய கலாச்சாரப் பேரவை #MJK_IT_WING பஹ்ரைன் மண்டலம்